'எந்தப் பக்கம் என்பது பற்றி சிந்திக்கவேண்டும்'
உக்ரேனுக்கு எதிராகப் போர் தொடுத்திருக்கும் ரஷ்யா, இந்தியாவின் நெருக்கத்தை அதிகரிக்கும் விதமாக மிகக் குறைந்த விலையில் கச்சா எண்ணெய்யை அந்நாட்டுக்கு விநியோகிக்க முன்வந்துள்ளது.
20 நாள்களைக் கடந்து போர் நீடித்து வரும் நிலையில் ரஷ்யா அறிவித்த சலுகையைப் பயன்படுத்திக்கொள்வதற்கான முயற்சியில் இந்திய அரசாங்கம் இறங்கி இருப்பதாக அதுகுறித்து அறிந்தவர்களை மேற்கோள் காட்டி டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
இந்திய அரசாங்கத்திடமிருந்து இதுகுறித்து அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளிவராத நிலையில், ஊடகங்களுக்கு இந்த விவகாரம் கசிந்துள்ளது.
இந்தியா தனது தேவைக்கு 3.5 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய்யை அதிகமான விலைத் தள்ளுபடியில் ரஷ்யாவிடமிருந்து பெறுவதற்கு முயற்சி எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.
எண்ணெய் விநியோகத்திற்கும் அதற்கான காப்பீட்டுக்கும் தான் பொறுப்பேற்றுக்கொள்வதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
ரஷ்ய கச்சா எண்ணெய் விநியோகம் மூலம் இந்தியாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் சந்தித்து வரும் திண்டாட்டம் ஓரளவு தணியும் என்று கூறப்படுகிறது.
ரஷ்யா இந்தியாவின் பழைய நட்பு நாடு. அரசதந்திர, தற்காப்பு உறவுகள் இருநாடுகளுக்கும் இடையில் நீடிக்கின்றன. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் கடந்த ஆண்டு இந்தியா சென்றது நட்பை ஆழப்
படுத்தியது.
உக்ரேனுக்கு எதிரான போர் காரணமாக உலகச் சந்தையில் எண்ணெய் விலை இருமடங்கு ஏறியது. அது பல நாடுகளில் விலைவாசி ஏறும் அபாயத்தை ஏற்படுத்தி உள்ளது.
ரஷ்யா அளிக்க முன்வந்திருக்கும் கச்சா எண்ெணய்யின் விலை எவ்வளவு, தள்ளுபடி எவ்வளவு என்ற விவரங்கள் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
கடந்த வாரம் ரஷ்ய எரிசக்தி அமைச்சருடன் தொலைபேசி வாயிலாக இந்திய அமைச்சர் ஹர்தீப் பூரி பேச்சு நடத்தியதைத் தொடர்ந்து எண்ணெய் வாங்குவதற்கான முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன.
இந்தியா தனது எண்ணெய் தேவையில் 85 விழுக்காடு, இறக்கு மதியை நம்பியே உள்ளது.
2021 ஏப்ரல் முதல் இவ்வாண்டு ஜனவரி வரை, அதாவது போர் தொடங்குவதற்கு ஒரு மாதம் முன்பு வரை ரஷ்யாவிடமிருந்து 3.6 மில்லியன் டன் பீப்பாய் கச்சா எண்ணெய்யை இந்தியா வாங்கியுள்ளது.
போர் நடந்துவரும் வேளையில் எண்ணெய் அடிப்படையிலான ரஷ்ய-இந்திய நேசத்தை உற்றுக் கவனித்து வரும் அமெரிக்கா, வெளிப்படையாகக் கருத்துத் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் எண்ணெய்யை இறக்குமதி செய்ய அமெரிக்கா தடை விதித்துள்ளது. இவ்வேளையில், ரஷ்ய எண்ணெய்யை இறக்குமதி செய்ய இந்தியா முயற்சி எடுத்து வருகிறது.
"ரஷ்யாவுக்கு எதிரான பொருளி யல் தடையை இந்தியா மீறுவதாகக் கருதவில்லை.
"ஆயினும் தற்போதைய அதன் போக்கு வரலாற்றின் தவறான பக்கத்தில் இடம்பெற்றுவிடும்," என்று வெள்ளை மாளிகை பத்திரிகைச் செயலாளர் ஜென் சாகி தெரிவித்தார்.
"வரலாறு எழுதப்பட்டுக்கொண்டிருக்கிறது. இத்தகைய சூழலில் எந்தப் பக்கத்தில் நிற்கவேண்டும் என இந்தியா சிந்தித்துப் பார்க்க வேண்டும். ரஷ்ய தலைமையை நாம் ஆதரித்தால் அது உக்ரேன் மீதான படையெடுப்பை ஆதரிப்பதாகவே கருதப்படும்," என்றார் அவர்.
உக்ரேன் நிலவரம் - பக்கம் 8