முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் ஏப்ரல் 1 முதல் சிங்கப்பூர், மலேசியாவுக்கு இடையிலான தரைவழிப் பயணத்தை கட்டுப்பாடின்றி தாராளமாக மேற்கொள்ளலாம். கொவிட்-19 பரிசோதனை அல்லது தனிமை உத்தரவு ஆகியவற்றுக்கு அவர்கள் உட்படவேண்டி இருக்காது.
வாகனத்தை ஓட்டிச் செல்வோருக்கும் இது பொருந்தும். அண்டை நாடு
களுக்கு இடையில் சிறிய அளவிலான பயணத்தை மேற்கொள்ள, பெரிதும் எதிர்பாக்கப்பட்ட இந்த நடவடிக்கை கைகொடுக்கும்.
பயணத்தை மேற்கொள்வதற்கு முன் னரும் வந்திறங்கிய பின்னரும் பயணிகள் பரிசோதனையைச் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று சிங்கப்பூரும் மலேசியாவும் நேற்று கூட்டாக அறிவித்தன.
மேலும், இரு நாடுகளுக்கும் இடையில் தினந்தோறும் பயணம் ெசய்வோரின் எண்ணிக்கையில் விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகள் விலக்கிக்கொள்ளப்படும்.
விடிஎல் பேருந்துகளில் நாள் ஒன்றுக்கு 4,000 பேர் மட்டுமே பயணம் செய்யமுடியும் என்பது தற்போதைய ஏற்பாடு.
தரை வழியாக மேற்கொள்ளப்படும் எல்லாவிதமான போக்குவரத்திற்கும் இந்தப் புதிய ஏற்பாடு பொருந்தும்.
இது குறித்து பிரதமர் லீ சியன் லூங் தமது ஃபேஸ்புக் பதிவில், "இன்றைய அறிவிப்பு கொவிட்-19 சூழலுடன் வாழ்வதை நோக்கிய உருமாற்றத்தில் முக்கிய திருப்புமுனை," என்று குறிப்பிட்டார்.
"கொள்ளைநோய் காலம் முழுவதும் இருதரப்பும் வலுவான ஒத்துழைப்பைப் பின்பற்றி வந்ததை இது பிரதிபலிக்கிறது. மேலும், இருநாடுகளும் நெருக்கடியிலிருந்து வலுவுடன் மீண்டெழ இந்த நட
வடிக்கை உதவும்," என்றும் திரு லீ தெரிவித்தார். முன்னதாக, நேற்றுக் காலை மலேசியப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப்புடன் தாம் தொலைபேசி வழி உரையாடியதாகவும் அவர் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே, இந்தப் புதிய அறி விப்பை மலேசியப் பிரதமரும் வெளி யிட்டுள்ளார். இது, ஏப்ரல் 1 முதல் தனது அனைத்துலக எல்லைகளைத் திறக்கும் மலேசிய நடவடிக்கையுடன் இணைந்து உள்ளதாக அவர் தெரிவித்தார்.
சிங்கப்பூர்-மலேசியா எல்லைக் கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்படுவதால், கிட்டத்தட்ட கொவிட்-19க்கு முந்தைய நிலைக்குப் போக்குவரத்து திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொவிட்-19 தொற்று ஏற்படுவதற்கு முன்னர் உட்லண்ட்ஸ் கடற்பாலம் வழியாகவும் துவாஸ் இரண்டாம் பாலம் வழியாகவும் நாள் ஒன்றுக்கு கிட்டத்தட்ட 415,000 பேர் சென்று வந்தனர்.