சாங்கி விமான நிலையத்தில் ஏப்ரலில் இரட்டிப்பான பயணிகள் எண்ணிக்கை

சாங்கி விமான நிலையத்தில் கடந்த ஏப்ரல் மாதம் பயணிகள் எண்ணிக்கை இரட்டிப்பாகி, கொவிட்-19 பரவலுக்கு முன்பிருந்த எண்ணிக்கையில் 40 விழுக்காட்டை எட்டியுள்ளது.

போக்குவரத்து அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் புதன்கிழமை (மே 4) இதைத் தெரிவித்தார்.

சாங்கி விமானநிறுவனங்களுக்கான விருது நிகழ்ச்சியில் அவர் பேசினார்.

ஏப்ரல் 1ஆம் தேதி அன்று, சிங்கப்பூர் கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகளுக்கு தனது எல்லைகளை முழுமையாகத் திறந்துவிட்டது.

அதன் பின்னர் பயணிகள் எண்ணிக்கை மளமள என்று கூடிவிட்டது.

கடந்த மார்ச் மாதம், சாங்கி விமான நிலையத்தில் கொவிட்-19 பரவலுக்கு முன்பிருந்த அளவில் 18 விழுக்காட்டில் இருந்தது.

இந்த ஆண்டு இறுதிக்குள் கொவிட்-19 கிருமிப்பரவலுக்கு முன்பிருந்த பயணிகள் எண்ணிக்கையில் குறைந்தது 50 விழுக்காட்டை எட்ட வேண்டும் என்பது சிங்கப்பூரின் இலக்காகும்.

ஏப்ரலில் காணப்பட்ட பயணிகள் எண்ணிக்கையை அடுத்து சிங்கப்பூர் மிக விரைவில் அந்த இலக்கை எட்டும் சாத்தியம் உள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!