இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நீண்ட தூரம் வரிசைபிடித்து காத்துக் கிடக்கிறார்கள் வாகனமோட்டிகள். அவர்களின் கவலையை அதிகரிக்கும் செய்தியை இலங்கை எரிசக்தி அமைச்சர் கஞ்சனா விஜேசேகர தெரிவித்தார்.
எரிபொருளுடன் வியாழக்கிழமை இலங்கை வந்துசேர வேண்டிய கப்பல்கள் குறித்த நாளில் வரவில்லை என்றும் இந்த தாமதம் எரிபொருள் விநியோகத்தில் சிக்கலை அதிகப்
படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.
அதனால் வியாழன், வெள்ளி இருநாள்களுக்கு மட்டுமே விற்பனை நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படும் என்றும் அதுவும் குறைந்த அளவிலேயே தரப்படும் என்றும் அவர் கொழும்பு நகரில் செய்தியாளர்களிடம் கூறினார்.
எரிபொருள் தட்டுப்பாட்டைச் சமாளிக்கும் பொருட்டு, ஏற்
கெனவே திட்டமிட்டபடி புதன்கிழமையுடன் நாடாளுமன்றக் கூட்டம் முடித்துக்கொள்ளப்பட்டது. அந்தக் கூட்டம் நேற்று வரை நடப்பதாக இருந்தது.
நாடாளுமன்றக் கூட்டம் நடப்பதற்கு இலங்கையின் முக்கிய எதிர்க்கட்சியான சமாகி ஜன பலவேகயாவின் தலைவர் சஜித் பிரேமதாச எதிர்ப்புத் தெரிவித்திருந்தார்.
மோசமான பொருளியல் நெருக்கடியில் சிக்கி நாடு திண்டாடி வரும் வேளையில் நாடாளு மன்றத்தில் நேரத்தைச் செலவிடுவது வீண்செயல் என்று கூறிய அவர், தமது கட்சி
நாடாளுமன்றக் கூட்டத்தில் பங்கேற்காது என்றார்.
அண்டை நாடான இந்தியா இலங்கைக்குப் பல்வேறு உதவி களைச் செய்து ஆதரித்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் நிபுணர் குழு ஒன்றை இலங்கைக்கு இந்தியா அனுப்பி வைத்தது.
இலங்கைப் பொருளியல் மீட்சியடைந்து நிலைபெறும் வரை இந்தியா அளிக்கவேண்டிய உதவிகள் குறித்து இந்திய, இலங்கை அதிகாரிகள் ஆலோ சித்ததாக அதிபர் கோத்தபாய ராஜபக்சேவின் அலுவலகம் தனது அறிக்கையில் தெரி வித்தது.
இச்சந்திப்பைத் தொடர்ந்து இந்தியா அனுப்பிய 3 பில்லியன் இலங்கை ரூபாய் மதிப்பிலான மனிதாபிமான உதவிப்பொருள் கள் நேற்று இலங்கை வந்து சேர்ந்ததாக அங்குள்ள ஊடகம் ஒன்று தெரிவித்தது.
அரிசி, பால் மாவு, மருந்துப் பொருள்கள் உட்பட 15,000 டன் அத்தியாவசியப் பொருள்கள் கொழும்பு வந்திறங்கின.
இவற்றில் அரிசி மட்டும் 14,700 டன். பால் மாவு 250 டன், மருந்துப் பொருள்கள் 38 டன். இவை யாவும் இந்திய மக்கள் நன்கொடையாக வழங்கியவை என்று அந்த ஊடகம் குறிப்பிட்டது.
இலங்கைக்கு US$1.5 பில்லியன் கடனுதவி செய்யப்படும் என்று இந்தியா ஏற்கெனவே அறிவித்திருந்தது.
மின்சாரம் இன்றியும் விண்ணை முட்டிவிட்ட விலைவாசியைத் தாங்க இயலாமலும் 22 மில்லியன் இலங்கை மக்கள் தவித்து வருகின்றனர்.