கொவிட்-19 கிருமித்தொற்று காரணமாக நாட்டுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சிங்கப்பூர் தொடர்ந்து ஆராய்ந்து வருகிறது. கடந்த ஆண்டு அந்நோயின் விளைவாக ஏற்பட்ட மரணங்களின்
எண்ணிக்கை உச்சம் தொட்டன.
2020ஆம் ஆண்டைக் காட்டிலும் கடந்த ஆண்டு பதிவான கொவிட்-19 மரணங்கள் 10.1 விழுக்காடு கூடியதாக கடந்த மாதம் 30ஆம் தேதி வெளியிடப்பட்ட அதிகாரபூர்வப் புள்ளிவிவரங்கள்
காட்டுகின்றன.
மாறாக, குழந்தை பிறப்பு விகிதம் கடந்த ஆண்டு 0.2 விழுக்காடு மட்டுமே உயர்ந்தது.
கடந்த ஆண்டு மொத்தம் 24,292 பேர் மாண்டனர். 2020ஆம்
ஆண்டில் பதிவான மரண எண்ணிக்கையைவிட இது 2,238
அதிகம்.
கொவிட்-19 கிருமித்தொற்று காரணமாக சிங்கப்பூரில் எதிர்பார்த்
ததைவிட அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
இதற்குப் பல காரணங்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூப்படையும் மக்கள்
தொகையும் அதில் அடங்கும். கொவிட்-19 நெருக்கடிநிலையால் நாட்டின் சுகாதாரப் பராமரிப்புக் கட்டமைப்புக்கு ஏற்பட்ட நெருக்குதலும் கூடுதல் மரண எண்ணிக்கைக்குக் காரணமாக இருந்திருக்கக்கூடும் என்று சுகாதாரப் பரா
மரிப்பு நிபுணர்கள் கூறுகின்றனர்.
2017ஆம் ஆண்டிலிருந்து சீரான முறையில் குறைந்து வந்த வயது அடிப்படையிலான மரண விகிதம், கடந்த ஆண்டு 100,000 பேருக்கு 557 பேர் என ஏற்றம் கண்டது. 2020ஆம் ஆண்டில் 100,000 பேருக்கு 519 பேராக அது இருந்தது. இந்தப் புள்ளிவிவரங்களை சுகாதார அமைச்சு கடந்த மார்ச் மாதம் வெளியிட்டது.
மரண எண்ணிக்கை தொடர்பான பொதுவான பதிவைக் காட்டிலும் வயது அடிப்படையிலான மரண விகிதம் அர்த்தமுள்ள ஒப்பீட்டைக் காட்டுவதாக நிபுணர்கள் தெரிவித்தனர். வயது அடிப்படையிலான மரண விகிதம் மக்கள்தொகையின் சராசரி வயதைக் கருத்தில் கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டது.
கொவிட்-19 கிருமித்தொற்று காரணமாக உலகளாவிய நிலையில் மில்லியன்கணக்கானோர் மரணமடைந்தனர். எனவே, சிங்கப்பூரில் வயது அடிப்படையிலான மரண எண்ணிக்கை அதிகரித்ததில் ஆச்சரியம் இல்லை என்று சுகாதார அமைச்சு கூறியது.
இருப்பினும், குறைவான கொவிட்-19 இறப்பு விகிதம் கொண்ட நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று என்று அமைச்சு தெரிவித்தது.
கொவிட்-19 நெருக்கடிநிலையால் மருத்துவப் பரிசோதனைகள், உடனடியாகச் செய்யத் தேவையில்லாத அறுவை சிகிச்சைகள் ஆகியவற்றைத் தள்ளிப்போடும் நிலையும் ஏற்பட்டது.