புற்றுநோயால் அவதியுறும் சிறாருக்குக் கைகொடுக்கும் அறநிறுவனத்துக்கு நிதி திரட்டும் வகையில் நேற்று நடைபெற்ற மோட்டார் சைக்கிள் ஊர்வலத்தில் துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் கலந்துகொண்டார்.
நிதி அமைச்சருமான திரு வோங், ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 500 ரக மோட்டார் சைக்கிளை ஓட்டினார். இந்த மோட்டார் சைக்கிள் ஊர்வலம் மூலம் நடத்தப்பட்ட நிதி திரட்டலுக்கு 'ரைடர்ஸ் எய்ட் சிங்கப்பூர்' அமைப்பு ஏற்பாடு செய்தது. நேற்று பிற்பகல் 1 மணி அளவில் தெம்பனிஸ் கனரக வாகன நிறுத்துமிடத்தி
லிருந்து பல மோட்டார் சைக்கிள்கள் ஒன்றாகப் புறப்பட்டுச் சென்றன.
இதுவரை $30,000 திரட்டப்பட்டுள்ளதாக அமைப்பின் தலைவர் திரு சூரிய குமார் தெரிவித்தார். பிற்பகல் 1.45 மணி அளவில் மோட்டார் சைக்கிள்கள் பாசிர் ரிஸ் வட்டாரத்தில் உள்ள அல் இஸ்திக்ஃபர் பள்ளிவாசலிலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள லோயாங் துவா பெக் கோங் கோயிலுக்குச் சென்றுகொண்டிருந்தபோது துணைப் பிரதமர் வோங் மோட்டார் சைக்கிளில் வந்து ஊர்வலத்தில் சேர்ந்துகொண்டார். கோயிலைச் சென்றடைந்ததும் அங்கு கூடியிருந்தோரிடம் அவர் பேசினார். தாம் மோட்டார் சைக்கிள் ஓட்டி 20 ஆண்டு
களுக்கு மேல் ஆகிவிட்டதாகவும் மீண்டும் அதை ஓட்டி மலரும் நினைவுகளைக் கொண்டு வந்ததற்கு நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறினார். ஆகக் கடைசியாக தாம் அமெரிக்காவில் படித்துக்கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிள்
ஓட்டியதாக அவர் நினைவுகூர்ந்தார்.
பிரிவு 2, 2ஏ, 2பி என மோட்டார் சைக்கிள்
களுக்கான அனைத்து ஓட்டுநர் உரிமங்களையும் திரு வோங் வைத்திருக்கிறார்.
அமெரிக்காவில் மாணவராக இருந்தபோது மோட்டார் சைக்கிள் ஓட்ட அவர் கற்றுக்கொண்டார். விஸ்கோன்சின் மாநிலத்தின் மேடிசன் நகரில் சொந்தப் போக்குவரத்துக்காக அவர் சுசுகி மோட்டார் சைக்கிள் ஒன்றை வைத்திருந்தார்.
"சிங்கப்பூருக்குத் திரும்பி வேலை செய்யத் தொடங்கியபோது குறிப்பிட்ட காலகட்டத்துக்கு ஸ்கூட்டர் ஒன்றை வைத்திருந்தேன்," என்றார் திரு வோங்.
நே்றறைய மோட்டார் சைக்கிள் ஊர்வலத்துக்காக தமக்கு வழங்கப்பட்ட மோட்டார் சைக்கிளில் திரு வோங் கையெழுத்திட்டார். அந்த மோட்டார் சைக்கிள் உபி வட்டாரத்தில் உள்ள மோட்டார் சைக்கிள் விற்பனையாளரின் கடையில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும். திரு வோங்கிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அவர் மோட்டார் சைக்கிளுடன் இருப்பது போன்று தீட்டப்பட்ட ஓவியத்தை அவருக்கு நினைவுப் பரிசாக திரு குமார் வழங்கினார்.
நிதி திரட்டலில் இறங்கிய அனைவருக்கும் இவ்வாண்டு 30 ஆண்டுகள் நிறைவைக் கொண்டாடும் சிறார் புற்றுநோய் அறநிறுவனத்தின் சமூகப் பங்காளித்துவப் பிரிவின் உதவி இயக்குநர் திருவாட்டி இங் சியாவ் சீ நன்றி தெரிவித்தார்.