மாதங்கி இளங்கோவன்
2019க்குப் பிறகு சிங்கப்பூரில் நேற்றிரவு நடைபெற்ற எஃப்1 கார் பந்தயத்தில் 'ரெட் புல்' குழுவின் செர்ஜியோ பெரெஸ் முதலிடத்திற்கு வந்து சிங்கப்பூர் எஃப்1 விருதை வென்றார். இரண்டாம் இடத்தில் ஃபெராரியின் சார்ல்ஸ் லெக்லெர்க் 7.595 வினாடி வித்தியாசத்தில் வந்தார். அவர்தான் நேற்று முன்தினம் நடைபெற்ற தகுதிச்சுற்றில் முதலிடம் பெற்று இறுதிச்சுற்றின் தொடக்கத்தில் முதல்நிலையிலிருந்து பந்தயத்தைத் தொடங்கினார்.
மூன்றாம் இடத்தை அதே குழுவைச் சேர்ந்த கார்லோஸ் செயின்ஸ் கைப்பற்றினார். சிங்கப்பூர் பந்தயத்தில் ஐந்து முறை வெற்றி வாகை சூடிய 'ஆஸ்டன் மார்டின்' குழுவின் செபாஸ்டியன் வெட்டலும் நான்கு முறை முதலிடம் பெற்ற 'மெர்சிடிஸ்' குழுவின் லுவிஸ் ஹேமில்டனும் இம்முறை முதல் மூன்று இடங்களில் வரவில்லை. வெட்டல் 8ஆம் இடத்திற்கு ம் ஹேமில்டன் 9ஆம் இடத்திற்கும் தள்ளப்பட்டனர்.
பந்தயம் தொடங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன் பலத்த மழை பெய் ததால் பந்தயம் ஒத்திவைக்கப்பட்டு இரவு 8 மணிக்குப் பதிலாக 9.05 மணிக்குத் தொடங்கியது. மழை நனைத்ததால் சறுக்கிவிடக்கூடிய தடத்தில் சவால்மிக்கப் பந்தயத்தில் ஈடுபட்டனர் இவ்வாண்டின் 'எஃப்1' ஓட்டுநர்கள்.