சிங்கப்பூர் அரசாங்கம் கூடுதல் தனியார் வீடுகளைக் கட்டுவதற்கு நிலத்தை ஒதுக்கியுள்ளது.
அரசாங்க நில விற்பனைத் திட்டத்தின்கீழ், அடுத்த ஆண்டின் முதல் பாதியில் ஏழு இடங்கள் விநியோகிக்கப்படும்.
அதில் மொத்தம் 4,090 தனியார் வீடுகள் கட்டப்படும்.
நகர சீரமைப்பு ஆணையம் இதை வியாழன் (டிச. 9) அன்று தெரிவித்தது.
ஒதுக்கப்பட்ட இடங்களில், வீடுகளும் வணிக வளாகங்களும் கட்டுவதற்கு 6.8 ஹெக்டர் பரப்பளவுள்ள ஜுரோங் லேக் வட்டார நிலப்பகுதியும் ஒன்று.
மரினா கிரசென்ட் கார்டன்சிலும் வீடுகளும் வணிக வளாகங்களும் கட்ட நிலம் ஒதுக்கப்பட்டது.
இவ்வாண்டின் இரண்டாவது பாதியில் தனியார் வீடுகளைக் கட்ட ஒதுக்கப்பட்ட இடத்தைவிட இது 16.7 விழுக்காடு அதிகம்.
இவ்வாண்டின் இரண்டாம் பாதியில் 3,505 தனியார் வீடுகளைக் கட்டுவதற்கான நிலத்தை அரசாங்கம் ஒதுக்கியது.
தனியார் வீடுகளுக்கான தேவை அதிகரித்து வரும் வேளையில் அரசாங்கம் அதன் உறுதிசெய்யப்பட்ட பட்டியலின்கீழ், தனியார் வீடுகளுக்காக கூடுதல் இடத்தை ஒதுக்கி வருகிறது.