காதலிக்க மறுத்த பெண்ணுக்கு 44 வெவ்வேறு தொலைபேசி எண்களில் இருந்து தொல்லை கொடுத்த ஆடவருக்கு 28 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் பிரிட்டனில் நடந்தது.
டர்ஹம் பல்கலைக்கழகத்தில் படிக்கும் 22 வயது மா கெய்ச்சன் என்ற அந்த ஆடவரும் அதே பல்கலைக்கழகத்தில் படிக்கும் 21 வயது பெண்ணும் பழகிப் பார்ப்பதற்காக (dating) கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சந்தித்தனர்.
முதல் சந்திப்பிலேயே அப்பெண் கெய்ச்சனை மறுத்துவிட்டார்.
மாணவியைத் தொடர்ந்து சந்திக்க விரும்பிய கெய்ச்சன், அவரது வகுப்பிற்குச் சென்றும் பலமுறை அன்பளிப்புகள் அனுப்பியும் தொந்தரவு செய்தார்.
கெய்ச்சன் வெவ்வேறு 44 தொலைபேசி எண்களில் இருந்து அப்பெண்ணை அழைத்து தொடர்ந்து தொல்லை கொடுத்தார்.
இதனால் அந்த மாணவி மனரீதியாகவும் பாதிக்கப்பட்டார்.
அதன் பின்னர் மாணவி காவல்துறையில் புகார் கொடுக்க, கெய்ச்சன் டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்டர்.
பிணையில் வெளிவந்த கெய்ச்சன் மீண்டும் அப்பெண்ணிற்கு தொல்லை கொடுத்ததால் அவர் ஜனவரி 30ஆம் தேதி மீண்டும் கைதுசெய்யப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டது.
கெய்ச்சன் 14 மாதம் பிரிட்டன் சிறையில் அடைக்கப்படுவார். மீதம் உள்ள 14 மாத சிறைத் தண்டனையை அவரது சொந்த நாடான சீனாவில் நிறைவேற்ற வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.