லண்டன்: உலக வரலாற்றில் இது வரை இல்லாத அளவுக்கு 'பனாமா பேப்பர்ஸ்' என்று குறிப்பிடப்படும் 11.5 மில்லியன் ஆவணங்களில் இடம்பெற்றுள்ள ரகசியத் தக வல்கள் கசிந்துள்ளன. வரி ஏய்ப்பு செய்து வெளிநாடுகளில் பதுக்கப்பட்ட முதலீடுகளை ரகசிய ஆவணங்கள் வெளிச்சம் போட்டு காட்டுகின்றன. உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 2.6 டெட்ராபைட் (2,600 கிகாபைட்) அளவுள்ள ரக சியத் தகவல்களின் தொகுப்பு, 200 உயர்வரையறை திரைப்பட கோப்புகளுக்கு ஈடானது என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஆவணங்களில் சிக்கியிருக்கும் சில உலகத் தலை வர்கள், பிரமுகர்கள், அரசியல் வாதிகளின் தலைகள் உருளு கின்றன. இதில் ஐஸ்லாந்து பிரதமர் விதிவிலக்கல்ல. ரகசிய ஆவணங் களில் ஐஸ்லாந்து பிரதமர் சிக் முண்டு டேவிட் குன்லாக்சன் பெயரும் அவருடைய மனை வியின் பெயரும் குறிப்பிடப்பட்டு உள்ளது. இதனால் ஐஸ்லாந்து பிரதமர் பதவியிலிருந்து விலகு வதாக அறிவிப்பு வெளியானது. ஆனால் அவர் பதவி விலக வில்லை. சில காலம் ஒதுங்கியிருப்பார் என்று பின்னர் வந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.