மலேசியாவில் வெள்ளப்பெருக்கு: தவிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள்

கோலாலம்பூர்: மலேசியாவின் வடகிழக்கு மாநிலங்கள் மோசமான வெள்ளப்பெருக்கிலிருந்து மீள சிரமப்படும் வேளையில் நிவாரண முகாம்களில் இன்னமும் ஆயிரக்கணக்கான மக்கள் தவிக்க நேர்ந்துள்ளது. நிவாரண முகாம்களில் தங்கியுள்ளவர்களுக்கு போதிய உணவு இருந்த போதிலும் சுகாதாரம் குறித்து கவலைப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மக்கள் வீடுகளைவிட்டு வெளியேறிய நிலையில் சூறையாடல் சம்பவங்கள் நடக்கக்கூடும் என்ற அச்சம் மக்களிடம் அதிகரித்துள்ளது. வேலைக்குச் செல்ல முடியவில்லை, கையில் இருக்கும் பணமும் செலவாகிக் கொண்டிருக்கிறது என்று முகாமில் தங்கியுள்ள ஒருவர் வருத்தத்துடன் கூறினார். கிளந்தான் மற்றும் திரெங்கானு ஆகிய மாநிலங்களிலிருந்து சுமார் 18,000 பேர் வீடுகளைவிட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர். இந்த எண்ணிக்கை இதற்கு முன்பு 23,000 ஆக இருந்தது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!