சோல்: ஊழல் விவகாரம் மற்றும் அதிகாரத்தைத் தவறாகப் பயன் படுத்தியது ஆகிய குற்றச்சாட்டு களின் பேரில் அதிபர் பதவி யிலிருந்து நீக்கப்பட்ட திருவாட்டி பார்க் கியன் ஹையை கைது செய்ய நீதிமன்றம் ஆணை பிறப்பிக்கக் கோரி அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனு குறித்த நீதிமன்ற விசாரணை நேற்று தொடங் கியபோது திருவாட்டி பார்க் நீதிமன்றத்திற்கு வந்திருந்தார். அப்போது அவர் செய்தியாளர்கள் யாரிடமும் பேசவில்லை. முன்னதாக திருவாட்டி பார்க் நீதிமன்றத்திற்கு புறப்படுவதற்கு முன்பு அவரது வீட்டுக்கு வெளியில் ஒன்றுகூடிய அவரது ஆதரவாளர்களுக்கும் போலி சாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
தென்கொரிய முன்னாள் அதிபர் திருவாட்டி பார்க்கின் வீட்டுக்கு முன்பு ஒன்றுகூடிய அவரது ஆதரவாளர்களுக்கும் போலிசாருக்கும இடையே மோதல் ஏற்பட்டது. பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கும் திருவாட்டி பார்க் தன் மீது கூறப்படும் அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்து வந்துள்ளார். படம்: ராய்ட்டர்ஸ்