$6.6 மி. இழப்பை எதிர்நோக்கும் மலேசிய விமான நிறுவனம்

சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையிலான ஆகாயவெளி சர்ச் சையைத் தொடர்ந்து மலேசிய மலிவுக்கட்டண விமான நிறுவன மான ஃபயர்ஃபிளை பேரிழப்பை எதிர்நோக்குவதாகத் தெரிவித்துள்ளது. சிங்கப்பூருக்கான அதன் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து மாதாந்திர அடிப்படையில் 20 மில் லியன் ரிங்கிட் (S$6.6 மில்லியன்) வரை வருமான இழப்பு ஏற்படும் என்று ஃபயர்ஃபிளை குறிப்பிட்டு உள்ளது. மலேசிய ஏர்லைன்ஸ் குழு மத்தைச் சேர்ந்த துணை நிறுவனம் ஃபயர்ஃபிளை. "ஃபயர்ஃபிளை கடந்த மூன்றாண்டுகளாகச் சிறந்த முறையில் இயங்கி வருகிறது.

ஆனால் இது எங்கள் குழுமத்துக்குப் பேரிழப்பு," என்று குழுமத்தின் தலைமை நிர் வாக அதிகாரி இஷாம் இஸ்மாயில் 'த மலேசியன் இன்சைட்' ஊட கத்திடம் கூறினார். தினந்தோறும் 20 விமானச் சேவைகளை நடத்தி வந்த ஃபயர் ஃபிளை, சிலாங்கூர் மாநிலத்தின் சுபாங் விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூருக்கு நேரடிச் சேவையில் ஈடுபட்டு வந்தது. சிங்கப்பூர்=மலேசியா இடையி லான சர்ச்சைகளுக்குத் தீர்வு காணும் வரையிலும் ஒழுங்குமுறை விதிகளை இருநாடுகளின் விமானப் போக்குவரத்து அதி காரிகளும் பேசி இறுதி செய்யும் வரையிலும் சிலேத்தார் விமான நிலையத்தில் தரை இறங்க ஃபயர் ஃபிளை விமான நிறுவனத்துக்கு உரிமம் வழங்கப்படவில்லை என்று மலேசிய விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!