ஜோகூர் பாரு: ஜோகூர் முதல்வர் ஒஸ்மான் சப்பியான் இவ்வார இறுதியில் பதவி விலகுவார் என உறுதிப்படுத்தப்படாத தக வல்கள் தெரிவிக்கின்றன.
அவரது பதவி விலகலைத் தொடர்ந்து அமைச்சரவை மாற்ற மும் இடம்பெறும் என்று கூறப்படு கிறது.
மலேசிய பிரிபூமி பெர்சாத்துக் கட்சியின் தலைவரான பிரதமர் மகாதீரைச் சந்தித்துப் பேசிய பிறகு வார இறுதியில் கெம்பாஸ் சட்டமன்ற உறுப்பினருமான ஒஸ் மான் சப்பியான் தனது பதவி விலகலை அறிவிப்பார் என்று ஊகச்செய்திகளை மேற்கோள் காட்டி நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளேடு குறிப்பிட்டது.
ஜோகூர் மாநிலத்தின் தேசிய வளம், நிர்வாகம், நிதி, நகரத் திட்டம், பொருளியல் மேம்பாடு போன்ற முக்கியமான துறைகள் 67 வயது திரு ஒஸ்மானின் கீழ் செயல்படுகின்றன.
கடந்த சில வாரங்களாகவே முதல்வர் பதவியிலிருந்து ஒஸ் மான் பதவி விலகுவதாக பேச்சு அடிபடுகிறது.
ஆனால் ஜோகூர் முதல்வரின் பதவி விலகல் தற்போது உச்சக் கட்டத்தை எட்டியிருப்பதாக ஜோகூர் மாநில அரசுக்கு நெருக்கமான தகவல்கள் தெரி விக்கின்றன.
ஜோகூர் அரண்மனைக்கு முதல்வரின் செயல்பாட்டில் திருப்தியில்லாததால் அவர் பதவி விலகவிருப்பதாக மற் றொரு தகவலும் தெரிவிக்கிறது.
ஆனால் ஜோகூர் மாநில அர சாங்கமோ அல்லது பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கமோ இது வரை இதனை அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.
ஜோகூர் முதல்வர் வார இறுதியில் பதவி விலகுவார் எனத் தகவல்
9 Apr 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 9 Apr 2019 09:16
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!