தோஹா: கொரோனா தொற்றைத் தடுக்க பொது இடங்களில் முகக்கவசம் அணிவதை சுமார் 50 நாடுகள் கட்டாயமாக்கியுள்ளன. மீறுவோருக்கு பல நாடுகள் அபாரதமும் விதிக்கின்றன.
முகக்கவசம் அணியாவிட்டால் மத்திய அமெரிக்க நாடு ஒன்றில் 15 நாள் சிறைத் தண்டனையும் மொராக்கோவில் மூன்று மாத சிறைத் தண்டனையும் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளன.
ஆனால் இத்தகைய தடுப்பு நடவடிக்கைகளை செயல்படுத்துவதில் ஒரு படி மேலே சென்றுள்ளது வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தார்.
இங்கு முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதோடு மட்டுமல்லாமல், அந்த உத்தரவை மீறுபவர்களுக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடும் என்று அறிவித்துள்ளது கத்தார் அரசாங்கம்.
இதுதவிர அவர்களுக்கு S$78,600 வரையிலான அபராதமும் விதிக்கப்படக்கூடும். நேற்று முதல் இந்த உத்தரவு நடைமுறைக்கு வந்துள்ளது.
2.75 மில்லியன் மக்கள்தொகை கொண்ட கத்தாரில் 1.1 விழுக்காட்டினர் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். அங்கு சுமார் 30,000 பேரைக் கிருமித் தொற்றியுள்ளது. 15 பேர் மாண்டுவிட்டனர்.