ரோஹிங்ய மக்கள் மீது இனப்படுகொலையில் ஈடு பட்டதை மியன்மார் ராணுவத்தைச் சேர்ந்த இருவர் ஒப்புக்கொண்டு உள்ளனர். மியன்மார் ராணுவம் ரோஹிங்யா இன மக்களுக்கு எதிராக இனப்படுகொலையில் ஈடுபட்டு வருவதாகக் கூறி கிட்டத்தட்ட ஒரு மில்லியன் அகதிகள் பங்ளாதேஷ் நாட்டில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
இந்தக் குற்றச்சாட்டை மியன்மார் அரசும் அந்நாட்டு ராணுவமும் மறுத்துவரும் நிலையில், தற்பொழுது அந்நாட்டு ராணுவ வீரர்கள் இருவர் இனப்படுகொலையில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டுள்ளனர்.
அதில் ஒருவரான மியோ வின் தன் என்பவர் தமக்கு 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கிடைத்த உத்தரவு, “கண்ணில் யார் தென்பட்டாலும், காதால் கேட்கும் அனைத்தையும் சுடவும்,” என்று காணொளி ஒன்றில் தமது சாட்சியமாகப் பதிவு செய்துள்ளார்.
அந்த உத்தரவுக்கு இணங்க தான் 30 ரோஹிங்யா முஸ்லிம்களை சுட்டுக் கொன்றதுடன் அவர்களை கோபுரத்துக்கும் ராணுவத் தளத்துக்கும் அருகில் பெரிய புதைகுழி ஒன்றில் புதைத்ததாகவும் கூறியுள்ளளார்.
ஏறத்தாழ இதே சமயத்தில் பக்கத்தில் உள்ள இன்னொரு நகரத்தில் மற்றொரு வீரரான ஸோ நைங் தன் என்பவர் தனக்கும் தனது சக வீரர்களுக்கும் இதே போன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகக் கூறுகிறார்.
அவர்களது உயர் அதிகாரி, “பார்க்கும் அனைவரையும், அவர்கள் வயதானவர்களானலும் சரி, குழந்தைகளானாலும் சரி, சுட்டுக் ெகால்லுங்கள்,” என்று கூறியதாக தெரிவித்துள்ளார்.
“நாங்கள் சுமார் 20 கிராமங்களை அழித்தோம்,” என்று கூறும் இவர், கொன்றவர்களின் உடல்களை ெபரிய புதைகுழியில் புதைத்ததாக சொல்கிறார்.
இந்த இரண்டு வீரர்களின் காணொளியை போட்டி போராளிக் குழு பதிவு செய்ததாக பத்திரிகைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மியன்மாரில் உள்ள ரோஹிங்யா முஸ்லிம்களை அந்நாட்டு ராணுவம் இனப்படுகொலை செய்துள்ளதாக ஐநா அதிகாரிகள் தொடர்ந்து கூறிவரும் நிலையில், இதன் தொடர்பில் அந்நாட்டு ராணுவ வீரர்களே ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருப்பது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.
இவர்கள் இருவரும் மியன்மாரில் இருந்து சென்ற மாதம் தப்பித்தனர் என்றும் தற்பொழுது இவர்கள் ஹேக்கில் உள்ள அனைத்துலக குற்ற
வியல் நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அந்த நீதிமன்றத்தில் மியன்மார் ராணுவத் தலைவர்கள் தங்கள் நாட்டின் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படுகொலை தொடர்பான விசாரணையை எதிர்நோக்கியுள்ள நிலையில் இவ்விரு வீரர்களின் சாட்சியம் வந்திருப்பது முக்கியமாகக் கருதப்படுகிறது.
இவ்விரு வீரர்களின் சாட்சியமும் இதுவரை ரோஹிங்யா அகதிகள் கூறிவருவதை மெய்ப்பிப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.