கோலாலம்பூர்: அமெரிக்காவின் மைக்ரோசாஃப்ட் கார்ப்பரேஷன், மலேசியாவில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் US$1 பில்லியன் (S$1.3 பில்லியன்) முதலிடும்.
அரசாங்க அமைப்புகளோடும் உள்ளூர் நிறுவனங்களோடும் கூடிய புதிய பங்காளித்துவ செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக அந்த முதலீடு இடம்பெறும் என்று மலேசியாவின் பிரதமர் முகைதீன் யாசின் அறிவித்தார்.
அவர் நேற்று அந்தச் செயல்திட்டத்தை தொடங்கி வைத்தார்.
புதிய முதலீடுகள் மூலம் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தனது முதலாவது வட்டார கணினித் தகவல் மையத்தை நிறுவும் என்றும் அது பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கணினித் தகவல்களை நிர்வகிக்கும் என்றும் அவர் கூறினார்.