இலங்கையின் கடல் சூழலில் ஆக மோசமான பாதிப்புக்குக் காரணமான எரிந்து போன சரக்குக்கப்பல் ஒன்று முழுமையாக மூழ்கும் அபாயத்தை எதிர்நோக்குவதாக இலங்கை கடற்படை தெரிவித்தது.
சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட அந்தக் கப்பல், நெதர்லாந்தைச் சேர்ந்தது.
நூற்றுக்கணக்கான டன் ரசாயன மற்றும் பிளாஸ்டிக் பொருட்களைச் சுமந்த எம்விஎக்ஸ் பிரெஸ் பர்ல் என்ற அந்தக் கப்பல் கிட்டத்தட்ட 13 நாட்கள் தீயில் எரிந்தது. செவ்வாய்க்கிழமையன்று தீயணைப்பு வீரர்கள் மிகவும் பாடுபட்ட பிறகு தீயை அணைத்தனர்.