காபூல்: ஆப்கானிஸ்தானின்
கந்தஹார் நகரை தலிபான் போராளிகள் நெருங்குவதாக
செய்திகள் வெளியாகி உள்ளன.
இதனால் அங்கு வாழும்
மக்கள் பீதியடைந்திருப்பதாகவும் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்து வருவதாகவும் ஆப்கான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தலிபானின் முன்னாள்
கோட்டையாக கந்தஹார் விளங் கியது என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மையில் அமெரிக்கப் படையை ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற்ற அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முடிவெடுத்தார்.
அதையடுத்து, அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறி வருகின்றன.
இதுதான் சமயம் என்று இவ்
வளவு காலமாகக் காத்துக்கொண்டிருந்த தலிபான் போராளிகள், ஆப்கானிஸ்தானைத் தங்கள்
கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவர முழுவீச்சுடன் சண்டையிட்டு வருகின்றனர்.
தலிபானைச் சமாளிக்க முடியாமல் ஆப்கான் ராணுவ வீரர்கள் பலர் தப்பி ஓடுகின்றனர்.
சில இடங்களில் தலிபானுக்கும் ஆப்கான் ராணுவ வீரர்களுக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் பெரும்பாலான பகுதிகளை தலிபான் கைப்பற்றிவிட்டதாகக் கூறப்படுகிறது.
முக்கிய எல்லைப் பகுதிகளை தலிபான் தனது கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தலிபான் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தங்கள் வாழ்க்கை சீரழிந்துவிடும் என ஆப்கானியர்கள் பலர் அஞ்சுகின்றனர்.
நாட்டைவிட்டு வெளியேற பலர் முயன்று வருகின்றனர்.
"சண்டையால் 22,000 குடும்பங்கள் வசிப்பிடத்தை இழந்துவிட்டன. பாதிக்கப்பட்ட வட்டாரங்
களிலிருந்து பாதுகாப்பான இடங்
களுக்கு அவர்கள் அனைவரும் தப்பி ஓடிவிட்டனர்," என்று ஆப்கான் அகதிகள் துறைத் தலைவர்திரு டோஸ்ட் முகம்மது டர்யப் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.