ஹனோய்: அடுத்த மாதத்தி
லிருந்து ஃபூ குவோக் உல்லாசத் தீவை வெளிநாட்டு சுற்றுப்பயணிகளுக்கு மீண்டும் திறந்துவிட வியட்னாம் திட்டமிட்டுள்ளது.
கொவிட்-19 நெருக்கடிநிலையால் பாதிக்கப்பட்டுள்ள பொருளியலை உயிர்ப்பிக்கும் முயற்சியில் வியட்னாமிய அரசாங்கம் இறங்கியுள்ளது.
முன்னோட்டத் திட்டமாக ஆறு மாதங்களுக்கு அத்தீவு சுற்றுப்பயணிகளுக்குத் திறந்துவிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வியட்னாமின் அண்டை நாடான கம்போடியாவின் கடலோரப் பகுதியிலிருந்து 10 கிலோ மீட்டர் தூரத்தில் அத்தீவு உள்ளது.
கொவிட்-19 முதன்முதலாகத் தலைதூக்கியபோது கிருமிப் பரவலைத் தடுக்க வியட்னாம் நடைமுறைப்படுத்திய நடவடிக்கைகள் நல்ல பலன் அளித்தன.
ஆனால் கடந்த மூன்று மாதங்களில் டெல்டா கொவிட்-19 கிருமி வகை அங்கு தாண்டவம் ஆடி
வருகிறது.
முடக்கநிலை தொடர்ந்து நீட்டிக்கப்படுவதால் சுற்றுப்பயணத் துறை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக வியட்னாமின் சுற்றுப்பயணத்துறை, கலாசார அமைச்சர் நுயேன் வேன் ஹங் தெரிவித்தார்.