ஆக்லாந்து: நியூசிலாந்தில் கிருமித்தொற்று சம்பவங்கள் அதிகரித்து வரும்வேளையில், டென்மார்க்கில் இருந்து 500,000 தடுப்பூசிகளை வாங்கியுள்ளதாக அதன் பிரதமர் ஜெசிந்தா ஆர்டென் கூறியுள்
ளார்.
போதுமான தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளதாகக் கூறிய பிரதமர் ஜெசிந்தா, நாட்டு மக்கள் அனை
வரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தினார்.
ஆக்லாந்தில் நேற்று 20 உள்ளூர் கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவானதாக கூறிய நியூசிலாந்து,
நீண்ட நாட்களுக்குப் பிறகு சென்ற மாத இறுதியில் முதல் தொற்று சம்பவம் கண்டறியப்பட்ட பிறகு, இதுவரை 599 பேர் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
அதுபோல் ஆஸ்திரேலியாவும் ஐரோப்பிய ஒன்றியத்திடம் இருந்து கூடுதலாக 1 மில்லியன் மொடர்னா தடுப்பூசிகளை வாங்கியிருப்பதாக அதன் பிரதமர் ஸ்காட் மோரிசன் சொன்னார்.
இவ்வார பிற்பகுதியில் ஒரு மில்லியன் தடுப்பூசிகள் வந்து சேரும் என்றும் 25 மில்லியன் மொடர்னா தடுப்பூசிகளை வாங்கவுள்ளதாகவும் மோரிசன் சொன்னார்.
சிட்னியும் மெல்பர்னும் நீண்ட நாட்களாக முடக்கநிலையில் உள்ளதால், ஆஸ்திரேலிய பொருளாதாரம் தொடர்ந்து 2வது ஆண்டாக மந்தநிலைக்குச் செல்லக்கூடும் என்ற அபாயத்திற்கு மத்தியில், தடுப்பூசி வாங்கப்பட்டுள்ளது அதன் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனெனில் 70 விழுக்காட்டினர் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் வரை அங்கு முடக்கநிலை நடப்பில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.