மாஸ்கோ: ரஷ்யாவில் கொவிட்-19 காரணமாக அன்றாட மரண எண்ணிக்கை 1,000ஐ எட்டியுள்ளது. நேற்று 1,002 பேர் மாண்டதாகவும் மேலும் 33,208 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டதாகவும் ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து மூன்று நாட்களாக ரஷ்யாவில் கொவிட்-19 பாதிப்பு மோசமடைந்துள்ளது.
போதிய கட்டுப்பாடுகள் இல்லாததால் ரஷ்யாவில் கொவிட்-19 கிருமி கட்டுக்கடங்காமல் பரவி வருவதாக சுகாதாரத் துறை நிபுணர்கள் குறைகூறுகின்றனர். ரஷ்யாவில் தடுப்பூசி போட்டுக்கொண்டோர் விகிதம் குறைவாக உள்ளபோதிலும் பொருளியலை உயிர்ப்பிக்க கட்டுப்பாடுகள் தவிர்க்கப்படுவதாகக் கூறப்படுகிறது.