டாக்கா: பங்ளாதேஷில் இந்து கோயில்கள் அருகே அமைக்கப்பட்ட துர்கா பூஜை பந்தல்கள் சூறையாடப்பட்டன. பெகுலா உள்ளிட்ட நகரங்களில் கோயில்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதில் நால்வர் கொல்லப்பட்டனர். 22 பேர் காயமடைந்தனர்.
இந்நிலையில் பங்ளாதேஷில் இந்துக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள், ஆளும்கட்சியினர், எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்களும் கலந்துகொண்ட பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. அப்போது, 'இந்த சமய வன்முறையை நிறுத்துங்கள், உங்கள் குழந்தைக்கு அன்பு செலுத்தக் கற்றுக்கொடுங்கள், வெறுப்பை அல்ல' என்று எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியபடி மக்கள் சென்றனர்.