ஜகார்த்தா: இந்தோனீசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதில் கட்டடங்கள் குலுங்கின. சுமத்ரா தீவில் இருந்து 168 கிலோ மீட்டர் தொலைவில் நில அதிர்வு உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
ரிக்டர் அளவு கோலில் 6.7 ஆக நிலநடுக்கம் பதிவானதாக அமெரிக்க நில அதிர்வு ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் பெரியளவில் பொருள்சேதமோ, உயிர் சேதமோ ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் நிலநடுக்கப் பகுதியில் குடியிருந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்டைநாடான பிலிப்பீன்சையும் நிலநடுக்கம் தாக்கியதால், குடியிருப்புகளை விட்டு மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
லஸ்சன் தீவில் உள்ள மோராங்கில் உள்ளூர் நேரப்படி அதிகாலை நில அதிர்வு உணரப்பட்டதாகவும் ரிக்டர் அளவு கோலில் 6.4ஆக பதிவானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹாங்காங்கிலும் நிலநடுக்கத்தை உணர்ந்ததாக அந்நகர மக்கள் தெரிவித்திருந்தனர்.