மணல் புயலில் மறைந்துபோன புர்ஜ் கலிஃபா கட்டடம் 

உலகின் ஆக உயரமானக் கட்டடமான புர்ஜ் கலிஃபாவை இன்று மணல் புயலை மறைத்தது.

மத்திய கிழக்கு நாடுகளைத் தாக்கி வரும் மணல் புயல் ஐக்கிய அரபுச் சிற்றரசுகளை அடைந்தது.

828 மீட்டர் உயரமுள்ள புர்ஜ் கலிஃபா கட்டடம், வழக்கமாக துபாய் எங்கிருந்தும் பார்வைக்குத் தெரியும்.

ஆனால் மணல் புயலில் புர்ஜ் கலிஃபாவும் மற்ற உயரமான கட்டடங்களும் கண்களுக்குத் தெரியவில்லை.

மணல் புயலால் வானிலை குறித்தும் சாலைகளில் விபத்து அபாயம் குறித்தும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

அபுதாபியில் நேற்றிரவு காற்றுத் தரக் குறியீடு அபாயகரமான அளவை எட்டியது.

ஈரான், ஈராக், சவூதி அரேபியா, குவைத் உள்ளிட்ட நாடுகள் அண்மைய நாள்களில் மணல்புயலால் பாதிக்கப்பட்டுள்ளன.

அங்கு விமான நிலையங்கள், பள்ளிகள் போன்றவை மூடப்பட்டுள்ளன.

பல்லாயிரம் பேர் சுவாசப் பிரச்சினையால் மருத்துவமனைகளுக்குச் செல்ல வேண்டி இருந்தது.

மத்திய கிழக்கில் அண்மை காலமாக மணல் புயல்கள் அதிகரித்து வருகின்றன.

பருவநிலை மாற்றம் இதை மேலும் மோசமாக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!