உலகின் ஆக உயரமானக் கட்டடமான புர்ஜ் கலிஃபாவை இன்று மணல் புயலை மறைத்தது.
மத்திய கிழக்கு நாடுகளைத் தாக்கி வரும் மணல் புயல் ஐக்கிய அரபுச் சிற்றரசுகளை அடைந்தது.
828 மீட்டர் உயரமுள்ள புர்ஜ் கலிஃபா கட்டடம், வழக்கமாக துபாய் எங்கிருந்தும் பார்வைக்குத் தெரியும்.
ஆனால் மணல் புயலில் புர்ஜ் கலிஃபாவும் மற்ற உயரமான கட்டடங்களும் கண்களுக்குத் தெரியவில்லை.
மணல் புயலால் வானிலை குறித்தும் சாலைகளில் விபத்து அபாயம் குறித்தும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
அபுதாபியில் நேற்றிரவு காற்றுத் தரக் குறியீடு அபாயகரமான அளவை எட்டியது.
ஈரான், ஈராக், சவூதி அரேபியா, குவைத் உள்ளிட்ட நாடுகள் அண்மைய நாள்களில் மணல்புயலால் பாதிக்கப்பட்டுள்ளன.
அங்கு விமான நிலையங்கள், பள்ளிகள் போன்றவை மூடப்பட்டுள்ளன.
பல்லாயிரம் பேர் சுவாசப் பிரச்சினையால் மருத்துவமனைகளுக்குச் செல்ல வேண்டி இருந்தது.
மத்திய கிழக்கில் அண்மை காலமாக மணல் புயல்கள் அதிகரித்து வருகின்றன.
பருவநிலை மாற்றம் இதை மேலும் மோசமாக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.