மாஸ்கோ: ரஷ்யா மீதான சில தடைகள் நீக்கப்பட்டால், உக்ரேனில் இருந்து உணவுப் பொருள்கள் ஏற்றுமதிக்கு மனிதாபிமான பாதை ஏற்படுத்தப்படும் என்று ரஷ்யா கூறியுள்ளது.
ரஷ்யாவின் துணை வெளியுறவு அமைச்சர் அன்டரி ருடென்கோவை மேற்கோள்காட்டி இன்டர்பேக்ஸ் ஊடகம் இச்செய்தியை வெளியிட்டுள்ளது.
உக்ரேனின் கருங்கடல் துறைமுகங்களை ரஷ்யா முற்றுகையிட்டுள்ளதால், கிட்டத்தட்ட 20 மில்லியன் டன் தானியங்கள் உக்ரேனில் தேங்கிக் கிடக்கின்றன. இது உலகளவில் உணவுப் பற்றாக்குறைக்கு வழி வகுத்துள்ளது.
"உணவுப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கு, ரஷ்யா மீதான ஏற்றுமதி, நிதி பரிவர்த்தனை தடைகள் நீக்கப்படவேண்டும்.
"அத்துடன், கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ள அனைத்து துறைமுகங்களிலும் உக்ரேன் தரப்பில் வைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளும் அகற்றப்படவேண்டும்," என்றார் ருடென்கோ.