'தடைகள் நீக்கப்பட்டால் உணவு பிரச்சினைக்குத் தீர்வு'

'தடைகள் நீக்கப்பட்டால் உணவு பிரச்சினைக்குத் தீர்வு'

1 mins read
2d8d5188-397b-4847-a9c2-2fa449c1cdf3
-

மாஸ்கோ: ர‌ஷ்யா மீதான சில தடை­கள் நீக்­கப்­பட்­டால், உக்­ரே­னில் இருந்து உண­வுப் பொருள்­கள் ஏற்­று­ம­திக்கு மனி­தா­பி­மான பாதை ஏற்­ப­டுத்­தப்­படும் என்று ர‌ஷ்யா கூறி­யுள்­ளது.

ர‌ஷ்­யா­வின் துணை வெளி­யு­றவு அமைச்­சர் அன்­டரி ருடென்­கோவை மேற்­கோள்­காட்டி இன்­டர்­பேக்ஸ் ஊட­கம் இச்­செய்­தியை வெளி­யிட்­டுள்­ளது.

உக்­ரே­னின் கருங்­க­டல் துறை­மு­கங்­களை ர‌ஷ்யா முற்­று­கை­யிட்­டுள்­ள­தால், கிட்­டத்­தட்ட 20 மில்­லி­யன் டன் தானி­யங்­கள் உக்­ரே­னில் தேங்­கிக் கிடக்­கின்­றன. இது உல­க­ள­வில் உண­வுப் பற்­றாக்­கு­றைக்கு வழி வகுத்­துள்­ளது.

"உண­வுப் பிரச்­ச­னைக்­குத் தீர்வு காண்­ப­தற்கு, ரஷ்யா மீதான ஏற்­று­மதி, நிதி பரி­வர்த்­தனை தடை­கள் நீக்­கப்­ப­ட­வேண்­டும்.

"அத்­து­டன், கப்­பல்­கள் நிறுத்­தப்­பட்­டுள்ள அனைத்து துறை­முகங்­க­ளி­லும் உக்­ரேன் தரப்­பில் வைக்­கப்­பட்­டுள்ள கண்­ணி­வெ­டி­களும் அகற்­றப்­ப­ட­வேண்­டும்," என்­றார் ருடென்கோ.