ஆயிரக்கணக்கான ஈரானிய மாணவிகள் நச்சுக்காற்றால் பாதிப்பு; 100க்கும் மேற்பட்டோர் கைது

தெஹ்ரான்: ஈரானில் கடந்த நவம்பர் மாதத்திலிருந்து ஆயிரக்கணக்கான பள்ளி மாணவிகள் திடீரென நோய்வாய்ப்பட்டனர்.

சுயநினைவிழப்பு, குமட்டல், மூச்சுத் திணறல் போன்றவற்றால் அந்த மாணவிகள் பாதிக்கப்பட்டனர். 

மாணவிகள் திடீரென நோய்வாய்ப்பட்டபோது பள்ளிகளில் இருவித துர்நாற்றம் வீசியதாகத் தெரிவிக்கப்பட்டது.

அவதியுற்ற மாணவிகளில் சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த மர்மம் குறித்து  ஈரானிய அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், 200க்கும் மேற்பட்ட பள்ளிகளைக் குறிவைத்து நச்சுக்காற்றுத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். 

இது தொடர்பாக நாடெங்கும் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதானோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ஈரானிய அரசாங்கத்துக்கு எதிரான அமைப்புகள் இத்தாக்குதலை நடத்தியிருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது.

 

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!