லண்டன்: ஒரு விலங்கியல் தோட்டம் போரால் தரைமட்டமாகியது; மற்றொன்று மூடப்பட்டது. இரு விலங்கியல் தோட்டங்களிலிருந்து மீட்கப்பட்டுள்ள கரடிகள் இரண்டு, இனி பிரிட்டனில் புது வாழ்க்கையைத் தொடங்கவுள்ளன.
உக்ரேனைச் சேர்ந்த ‘யாம்பில்’ என்ற ஆசிய கறுப்புக் கரடி, ரஷ்யா நடத்திய தாக்குதலில் அதன் இல்லத்தை இழந்தது. விலங்கியல் தோட்டத்தில் அதனுடன் வாழ்ந்த சுமார் 200 விலங்குகள் அந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டன.
சுவீடனைச் சேர்ந்த பழுப்புநிறக் கரடி ஒன்று, அது இருக்க வேண்டிய விலங்கியல் தோட்டம் மூடவுள்ளதாக இருந்த நிலையில் கருணை முறையில் கொல்லப்படுவதாக இருந்தது.
மனதை பாதிக்கும் அனுபவத்தால் கரடிகளும் மனநலப் பிரச்சினைகளுக்கு உட்படலாம் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.