40,000 இணைய மோசடி சந்தேக நபர்களை சீனாவிடம் ஒப்படைத்த மியன்மார்

பெய்ஜிங்: மியன்மாரில் இணைய மோசடிச் செயல்களில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 40,000க்கும் அதிகமானோர் சென்ற ஆண்டு சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

சீன அரசாங்க ஊடகம் வெள்ளிக்கிழமையன்று இத்தகவலைத் தெரிவித்தது.

மியன்மாரின் எல்லைப் பகுதிகளில் இணைய மோசடிச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. பொதுவாக சீனா உள்ளிட்ட நாடுகளிலிருந்து அடிக்கடி மியன்மாருக்குக் கடத்திக் கொண்டுவரப்படுவோர் இணைய மோசடிச் செயல்களில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

இத்தகைய மோசடிகள் பெய்ஜிங்கை ஆத்திரப்படுத்தியுள்ளன. ஆண்டுதோறும் அவற்றில் பில்லியன்கணக்கான டாலர் சம்பந்தப்பட்டுள்ளதாக கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.

இணைய மோசடிகளை முறியடிக்க நடவடிக்கை எடுக்குமாறு சீனா, மியன்மாரைத் தொடர்ந்து கேட்டுக்கொண்டு வந்துள்ளது. பெய்ஜிங், மியன்மாரின் ராணுவ அரசாங்கத்துக்கு முக்கியப் பங்காளி.

மியன்மாரில் மோசடிகள் நடத்தப்படும் இடங்களில் குறைந்தது 120,000 பேர் சிக்கியிருக்கக்கூடும் என்று ஐக்கிய நாட்டு சபை சென்ற ஆண்டு தெரிவித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!