அன்வார் இப்ராகிமின் மேல்முறையீடு தோல்வி

கோலாலம்பூர்: ஓரினப்புணர்ச்சி குற்றச்சாட்டு மற்றும் சிறைத் தண்டனைக்கு எதிராக மலேசியாவின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் செய்திருந்த மேல்முறையீட்டை மலேசிய உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. ஐந்து ஆண்டு கால சிறைத்தண்டனையை ரத்து செய்ய அன்வார் மேற்கொண்ட கடைசி முயற்சியும் தோல்வி அடைந்துள்ளது. அதனால் 2018 நடுப்பகுதி வரை அன்வார் சிறை வாசத்தைத் தொடர வேண்டும். ஆனால் முயற்சியைக் கைவிடப் போவதில்லை என்று அன்வார் இப்ராகிம் சூளுரைத் துள்ளார். "நான் நம்பிக்கையோடு இருக்கிறேன். இது முடிவல்ல. நான் என்னுடைய சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி அடுத்த கட்ட நடவடிக்கையில் ஈடுபடுவேன்," என்று அவர் கூறியதாக மலேசிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!