தேசியக் கவிதை விழா கவிதைப் போட்டி

நான்கு மொழிகளில் தேசியக் கவிதை விழா ஜூலை மாதத்தில் நடைபெற உள்ளது. விழாவையொட்டி நான்கு மொழிகளில் கவிதைப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 13 முதல் 18 வயது வரையுள்ளோர், 18 வயதுக்கு மேற்பட்டோர் என இரு பிரிவுகளாக நடைபெறும் இப்போட்டியில் சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும் பங்கேற்கலாம். 'இன பேதமின்றி (Regardless of Race)' என்ற கருப்பொருளையொட்டி கவிதைகள் எழுதப்பட வேண்டும். கவிதைகளை அனுப்பி வைக்க வேண்டிய இறுதிநாள் 31.03.2017. கவிதைகள் 40 வரிகளுக்குள் இருக்க வேண்டும். தமிழ்க் கவிதைகளை ஆங்கில மொழி பெயர்ப்புடன் அனுப்ப வேண்டும். கவிதைகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: nationalpoetryfestival@gmail.com.

ஒவ்வொரு பிரிவிலும் போட்டியில் வெற்றி பெறும் மூன்று கவிதைகளும் தேர்வு பெறும் கவிதைகளும் தேசிய கவிதை விழாவில் வாசிக்கப்படும். வெற்றி பெறுவோருக்கு புத்தகப் பரிசுடன் புத்தகப் பற்றுச்சீட்டுகளும் வழங்கப்படும். அத்துடன், தேர்வுபெறும் கவிதைகள் நான்கு மொழித் தொகுப்பிலும் இடம்பெறும. போட்டி பற்றிய மேல் விவரங்களுக்கு குமாரி வூ ஜூ சிங்கை nationalpoetryfestival@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொள்ளலாம்.

http://www.nationalpoetryfestival.sg/poetrycompetition என்ற இணையப்பக்கத்திலும் விவரங்கள் பெறலாம். பல மொழி, பல தலைமுறைக் கவிஞர்களை ஒன்றிணைக்கும் இந்த மூன்று நாள் விழாவில் கவிதை வாசிப்பு, கருத்தரங்கம், பயிற்சிப் பட்டறை, உரை நிகழ்ச்சிகள் போன்ற பல அங்கங்கள் தமிழ், ஆங்கிலம், சீனம், மலாய் மொழிகளில் இடம்பெறவுள்ளன. சிங்கப்பூரில் கவிதை வாசிப்பையும் இலக்கிய ரசனையையும் மேம்படுத்தும் நோக்கில் தேசியக் கவிதை விழா மூன்றாவது ஆண்டாக இந்த ஆண்டு நடைபெறுகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!