இலங்கையின் மேற்கு, தெற்குப் பகுதிகளில் கடந்த வாரம் பெய்த கனமழையால் 14 மாவட்டங்கள் வெள்ளப்பெருக்காலும் நிலச்சரிவு களாலும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த இயற்கைப் பேரிடரில் சிக்கி இதுவரை 183 பேர் பலியாகி விட்டதாகவும் 112 பேர் காயமடைந் துள்ளதாகவும் மேலும் 110 பேரைக் காணவில்லை என்றும் பேரிடர் நிர்வாக மையம் நேற்றுக் காலையில் தெரிவித்தது. இந்த நிலையில், வெள்ளத்தால் மோசமாகப் பாதிக்கப்பட்ட மாவட் டங்களில் ஒன்றான ரத்னபுரியில் உள்ள கலவன மருத்துவ மனையை வெள்ளநீர் சூழ்ந்தது. இதையடுத்து, அங்கு அனும திக்கப்பட்டிருந்த 19 வயது கர்ப்பிணி ஒருவர் இலங்கை விமானப் படையின் Mi-=17 ஹெலி காப்டர் மூலம் மீட்கப்பட்டார்.
ஹெலிகாப்டரை வந்தடைந்த சில நிமிடங்களுக்குள் அந்தப் பெண் ஒரு குழந்தையைப் பிரச வித்தார். உடனடியாக தாயும் சேயும் அருகிலிருந்த மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆயினும், குறைமாதத்தில் பிறந்த தால் அந்தக் குழந்தை இறந்து விட்டது என்றும் அதனை ஈன்ற பெண் அபாய கட்டத்தைத் தாண்டி விட்டார் என்றும் ரத்னபுரி மருத் துவமனையின் இயக்குநர் தெரி வித்தார்.
இதற்கிடையே, 14 ஆண்டு களுக்குப் பிறகு சாதனை அள வாகப் பெய்த மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம், குடிநீர்க் கிணறுகளில் குப்பைகளைக் குவித்துவிட்டதால் அவற்றைச் சுத்தப்படுத்த பொதுமக்கள் முன் வந்து உதவவேண்டும் என்று அரசாங்கத் தொலைக்காட்சி மூலம் வேண்டுகோள் விடுக்கப் பட்டுள்ளது. வெள்ளம் காரணமாக ஏறத்தாழ 600,000 பேர் தங்களது வீடுகளை விட்டு வெளியேறிவிட்டதாகவும் கிட்டத்தட்ட 6,000 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் பேரிடர் நிர்வாக மையம் தெரிவித்துள்ளது.