மணிலா: பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவில் உள்ள சூதாட்டக் கூடத்தில் 37 பேர் பலியாகக் காரணமாக இருந்த துப்பாக்கிக் காரனைப் பற்றிய அடையாளங்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படாத நிலையில் தடயங்களைத் தேடு வதில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அத்தாக்குதலுக்கு ஐஎஸ் பயங்கரவாதக் குழு பொறுப் பேற்றுக்கொண்டுள்ள போதிலும் அது பயங்கரவாதத்துடன் தொடர்பு உடையது அல்ல என்று பிலிப்பீன்ஸ் போலிசார் கூறுகின்றனர். வெள்ளிக்கிழமை ரிசோர்ட்ஸ் வேல்டு மணிலா ஹோட்டலுக்குள் நுழைந்த துப்பாக்கிக்காரன் அங் கிருந்தவர்களை நோக்கி கண் மூடித்தனமாக சுட்டதுடன் சூதாட்டக் கூடத்தில் போடப் பட்டிருந்த மேசைகளை தீ வைத்துக் கொளுத்தினான். அந்த சம்பவத் தில் 37 பேர் உயிரிழந்தனர். பெரும்பாலோர் தீப்புகை காரணமாக மூச்சுத் திணறி உயிரிழந்தனர்; பலர் காயம் அடைந்தனர்.
அந்தச் சம்பவம் நடந்த ஐந்து மணி நேரத்திற்குப் பிறகு அந்தத் துப்பாக்கிக்காரன் அந்த ஹோட்டல் அறையில் இறந்து கிடந்ததாக போலிசார் கூறினர். ஈராக் மற்றும் சிரியாவில் செயல்பட்டு வரும் ஐஎஸ் பயங்கரவாதக் குழு, தங்கள் போராளிகள்தான் அத்தாக்குதலை நடத்தினர் என்று அறிவித்துள்ள நிலையில் அதனை ஏற்க பிலிப்பீன்ஸ் அதிகாரிகள் தொடர்ந்து மறுத்து வருகின்றனர். ஆதாரம் எதுவுமே இல்லாமல் தாக்குதலை நடத்தியது தாங்கள்தான் என்று ஐஎஸ் குழுவினர் கூறுவது இது புதிதல்ல என்று பிலிப்பீன்ஸ் போலிஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.