2020ஆம் ஆண்டுக்குள் கல்வி அமைச்சு புதிதாக 13 பாலர் பள்ளி களைத் திறக்க உள்ளது. இவற்றில் ஏழு பள்ளிகள் 2019ஆம் ஆண்டிலும் எஞ்சிய ஆறு பள்ளிகள் 2020ஆம் ஆண்டிலும் தொடங்கப்படும் என்ற தகவலை நேற்றுக் காலை நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கல்வி அமைச்சு பகிர்ந்துகொண்டது. மேலும், பாலர் பள்ளி சேவைகளுக்கு அதிக தேவையுள்ள இடங்களில் இந்தப் புதிய பள்ளிகள் அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் லீ சியன் லூங் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிகழ்த்திய தேசிய தின பேரணி உரையில் புதிய பாலர் பள்ளி நடவடிக்கைகளை முதன் முதலாக அறிவித்தார். இதற்கிடையே, கடந்த பிப்ரவரியில் அறிவிக்கப்பட்டதைப்போல கல்வி அமைச்சின் மூன்று புதிய பாலர் பள்ளிகள் அடுத்த ஆண்டு பொங் கோலில் திறக்கப்பட உள்ளன. வரும் 2023ஆம் ஆண்டுவாக்கில் ஐந்து மற்றும் ஆறு வயது நிரம்பிய குழந்தைகளில் ஐவரில் ஒருவர் கல்வி அமைச்சின் பாலர் பள்ளிகளில் இடம் பெறுவர்.
கல்வி அமைச்சின் 13 புதிய பாலர் பள்ளிகள்
24 Aug 2017 07:39 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 25 Aug 2017 10:42
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Mohamed Javed Indian Muslim Food: 473 Fernvale St, Singapore 790473
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!