ப. பாலசுப்பிரமணியம்
கடந்த ஈராண்டுகளாக கேம்பல் லேனில் இயங்கிவரும் இந்திய மரபுடைமை நிலையம் தனது முதல் நூலை வெளியிட்டு முத்திரை பதித்துள்ளது. இந்திய சமூகத்தினரின் பரந்த கலாசார மரபுடைமையைப் பதிவு செய்யும் வகையில் இந்திய மரபு டைமை நிலையம் நேற்று 'சிங்கப்பூர் இந்திய மரபுடைமை' (Singapore Indian Heritage) என்ற தலைப்பிலான நூலை தன் வளாகத்தில் வெளியிட்டது. நிலையத்தின் நிரந்தரக் காட்சி யகம், 300க்கும் மேற்பட்ட காட்சிப் பொருட்கள், புகைப்படங்கள், வர லாற்று ஆவணங்கள் தொடர்பில் கல்விமான்கள், இந்திய மரபு டைமை நிலையக் காப்பாளர்கள் எழுதிய கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
(இடமிருந்து) இந்திய மரபுடைமை நிலைய காப்பாளர் குமாரி நளினா கோபால், டாக்டர் அ. வீரமணி, இணைப் பேராசிரியர் ராஜேஷ் ராய், வர்த்தக தொழில் அமைச்சர் (தொழில்) எஸ். ஈஸ்வரன், இந்திய மரபுடைமை நிலைய ஆலோசனைக் குழுவின் தலைவரும் பொதுத் தூதருமான கோபிநாத் பிள்ளை. படம்: இந்திய மரபுடைமை நிலையம்