புரட்டாசி மாத விரதம் எதிரொலி; அசைவ உணவகங்களுக்குப் பாதிப்பு

சேலம்: புரட்டாசி மாத விரதம் காரணமாக அசைவ உணவகங்களில் 40 விழுக்காடு அளவிற்கு விற்பனை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் ஏற்படக்கூடிய நஷ்டத்தில் இருந்து தப்பிக்க, 20 விழுக்காடு உணவகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக சேலம் மாவட்ட உணவு உரிமையாளர்கள் சங்கத்தின் செயலர் பழனிசாமி தெரிவித்துள்ளார். "தமிழகத்தில் 1.50 லட்சம் உணவகங்கள் இயங்கி வருகின்றன. இதில் 30 விழுக்காடு உணவகங்கள் அசைவ உணவு மட்டுமே விற்பனை செய்கின்றன. "புரட்டாசி மாதத்தில், அசைவ உணவகங்களில் விற்பனை சரிந்து, மந்த நிலை ஏற்படுவது வழக்கம். கடந்த 2016 புரட்டாசியில் உள்ளாட்சித் தேர்தல் காரணமாக அசைவ உணவகங்களின் விற்பனையில் பாதிப்பு ஏற்படவில்லை; மாறாக வியாபாரம் சூடுபிடித்தது," என்கிறார் பழனிசாமி. ஆனால், நடப்பாண்டில் புரட்டாசி மாதம் பிறந்தபின், அசைவ உணவகங்களில் விற்பனை அளவு 40 விழுக்காடு சரிந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், பல உணவகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதால் அவற்றில் பணியாற்றுவோர் சொந்த ஊர் திரும்பியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!