சேலம்: புரட்டாசி மாத விரதம் காரணமாக அசைவ உணவகங்களில் 40 விழுக்காடு அளவிற்கு விற்பனை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் ஏற்படக்கூடிய நஷ்டத்தில் இருந்து தப்பிக்க, 20 விழுக்காடு உணவகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக சேலம் மாவட்ட உணவு உரிமையாளர்கள் சங்கத்தின் செயலர் பழனிசாமி தெரிவித்துள்ளார். "தமிழகத்தில் 1.50 லட்சம் உணவகங்கள் இயங்கி வருகின்றன. இதில் 30 விழுக்காடு உணவகங்கள் அசைவ உணவு மட்டுமே விற்பனை செய்கின்றன. "புரட்டாசி மாதத்தில், அசைவ உணவகங்களில் விற்பனை சரிந்து, மந்த நிலை ஏற்படுவது வழக்கம். கடந்த 2016 புரட்டாசியில் உள்ளாட்சித் தேர்தல் காரணமாக அசைவ உணவகங்களின் விற்பனையில் பாதிப்பு ஏற்படவில்லை; மாறாக வியாபாரம் சூடுபிடித்தது," என்கிறார் பழனிசாமி. ஆனால், நடப்பாண்டில் புரட்டாசி மாதம் பிறந்தபின், அசைவ உணவகங்களில் விற்பனை அளவு 40 விழுக்காடு சரிந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், பல உணவகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதால் அவற்றில் பணியாற்றுவோர் சொந்த ஊர் திரும்பியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
புரட்டாசி மாத விரதம் எதிரொலி; அசைவ உணவகங்களுக்குப் பாதிப்பு
25 Sep 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 26 Sep 2017 07:00
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!