கிருஷ்ணன் ராஜு மீது கொலைக் குற்றச்சாட்டு

ஜாலான் லோயாங் புசாரில் இருக் கும் கூட்டுரிமை புளோக் ஒன்றில் 44 வயது மாதைக் கொலை செய்ததாக நேற்று கிருஷ்ணன் ராஜூ, 50, என்பவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது-. கொலையுண்ட திருவாட்டி ரத்தின வைத்தின சாமி என்ற மாது, அந்த ஆடவரின் மனைவி என்று நம்பப்படுகிறது. அந்த மாதுக்கு வியாழக்கிழமை இரவு 9 மணிக்கும் 10.48 மணிக்கும் இடையில் அந்த ஆடவர் மரணத்தை ஏற்படுத்தி இருக்கிறார் என்று குற்றச்சாட்டு கூறுகிறது. கிருஷ்ணன் ராஜூ ஒரு போக்குவரத்து நிறுவனத்திற்குச் சொந்தக்காரர் என்று தெரிகிறது. அவர் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் வெள்ளிக்கிழமை போலிசிடம் சரணடைந்தார்.

அதற்கு முன்னதாக அவர் மலேசியாவுக்கு சென்றுவிட்டு சிங்கப்பூருக்கு திரும்பியிருந்தார். குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது கிருஷ்ணன் ராஜூ எந்த உணர்ச்சிகளையும் வெளிப்படுத்த வில்லை. அவர் மத்திய போலிஸ் பிரிவில் விசாரணைக்காவலில் வைக்கப்பட்டு இருக்கிறார். அவரை புலன்விசாரணைக்காக வெளியே கொண்டுவந்து விசாரிக்க அனுமதி கொடுக்கப்பட்டு இருக் கிறது. வரும் வெள்ளிக்கிழமை கிருஷ்ணன் ராஜூ நீதிமன்றத்தில் மீண்டும் முன்னிலையாவார். குற்றவாளி என்று தீர்ப்பானால் கிருஷ்ணன் ராஜூவுக்கு மரண தண்டனை விதிக்க சட்டத்தில் இடம் இருக்கிறது.

ரத்தின வைத்தின சாமி என்ற மாதுக்கு மரணம் விளைவித்ததாக நேற்று கிருஷ்ணன் ராஜூ என்பவர் மீது அரசு நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!