காற்பந்துப் போட்டியின்போது சிறுநீர் கழித்த கோல்காப்பாளரை நடுவர் சிவப்பு அட்டை காட்டி வெளியேற்றிய விநோத சம்பவம் இங்கிலாந்தில் நிகழ்ந்தது. தேசிய லீக் நார்த்தில் நேற்று முன்தினம் சால்ஃபர்ட் சிட்டி = பிராட்ஃபர்ட் பார்க் அவென்யூ குழுக்கள் மோதின. ஆட்டத்தின் 87வது நிமிடத்தில் சால்ஃபர்ட் கோல்காப்பாளர் மேக்ஸ் குரோகோம்ப் (வலது) கோல் கம்பத்திற்கு அருகே சிறுநீர் கழித்ததைக் கண்ட நடுவர், உடனடியாக சிவப்பு அட்டையை உயர்த்திக் காட்டி திடலைவிட்டே அவரை வெளியேற்றினார். தமது நடத்தைக்காக டுவிட்டர் மூலம் மன்னிப்புக் கோரிய குரோகோம்ப், அடக்கமுடியாமல் தவித்ததால் அப்படி நடந்து கொண்டதாகக் குறிப்பிட்டார். இப்படி நடப்பது இது முதல்முறை அல்ல. 2009ல் சாம்பியன்ஸ் லீக் ஆட்டத்தின்போது அப்போதைய ஆர்சனல் கோல்காப்பாளர் யென்ஸ் லீமான் விளம்பரப் பலகைக்குப் பின்னால் சென்று சிறுநீர் கழித்து விட்டு வந்தார். படம்: டுவிட்டர்
சிறுநீர் கழித்ததால் சிவப்பு அட்டை
30 Oct 2017 09:22 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 31 Oct 2017 08:16
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!