பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆப் பிள் 'ஐஃபோன்10' சிங்கப்பூர் ஆப்பிள் நிலையத்தில் நேற்று விற்பனைக்கு வந்தது. நிலையத்தின் கதவு காலை 8 மணிக்குத் திறக்கப்பட்டது. இரவி லிருந்தே பலரும் வரிசைப்பிடித்து நின்றிருந்தனர். வாடிக்கையாளர்களை நிலையத் தின் ஊழியர்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர். இரண்டே மணி நேரத்திற்குள் 20க்கும் அதிக 'ஐஃபோன்10' வகை கைபேசிகள் இணையத்தில் மறுவிற்பனைக்கு வந்தன. அவற்றின் விலை $2,500 அல்லது அதற்கும் மேற்பட்டதாக இருந்தது. விற்பவர்கள் $600 லாபம் வைத்து விலைபேசினர். ஐஃபோன் நிலையம் ஆர்ச்சர்ட் ரோட்டில் இருக்கிறது.
புதிய கைபேசியை வாங்குவதற்கு 800 குழுமியிருந்தனர். ஒருவருக்கு இரண்டு கை பேசிகள் என்று வரம்பு விதிக் கப்பட்டு இருந்தது. இந்த அதிநவீன ஐஃபோன்கள் $1,648 (64ஜிபி) மற்றும் $1,888 (256ஜிபி) விலைக்கு கொடுக்கப் பட்டன. சிங்கப்பூர் ஆப்பிள் நிலையத் தில் இரண்டே மாதத்திற்குள் இத்துடன் இரண்டாவது தடவை யாக பலரும் வரிசையில் நின்று புதிய ஆப்பிள் கைபேசிகளை வாங்கி இருக்கிறார்கள். கடந்த செப்டம்பரில் 'ஐஃபோன்8' மற்றும் 'ஐஃபோன்8 பிளஸ்' ஆகிய புதிய கைபேசிகள் விற்பனைக்கு வந்தன.
ஆர்ச்சர்ட் ரோட்டில் இருக்கும் ஐஃபோன் நிலையத்தில் புதிய 'ஐஃபோன் 10' வாங்க வரிசை. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்