தளவாட விநியோகத் துறையில் ஈடுபட்டுள்ள பலதரப்பட்டவர்கள் ஒரு முனையிலிருந்து மறு முனைவரை பொருட்களின் இடத்தை தெரிந்துகொள்வதற்கும் தேவையற்ற போக்குவரத்து மற்றும் தாமதத்தைத் தவிர்க்கவும் 'ட்ரிப்' எனும் ஒருங்கிணைந்த போக்கு வரத்துத் தளம் நேற்று தொடங்கப் பட்டுள்ளது. தொழில்நுட்பத்தைச் சார்ந்த இந்தப் போக்குவரத்து தீர்வு தளவாடத் துறையின் அத்தியா வசியத் தேவையைப் பூர்த்தி செய்யும் என்று புதிய திட்டத்தைத் தொடங்கிவைத்துப் பேசிய வர்த்தக தொழில் மற்றும் தேசிய வளர்ச்சி மூத்த துணை அமைச்சர் திரு கோ போ கூன் தெரிவித்தார்.
"சரக்குக் கப்பல் போக்குவரத்து, கொள்கலன் பணிமனை, சரக்கு உரிமையாளர்கள், துறைமுக அதிகாரிகள், போக்குவரத்து முகவர்கள் என்று தளவாட விநியோகத் துறையை சம்பந்தப் பட்ட பல நிலைகளில் உள்ள வர்களும் தொடர்ச்சியாக தகவல் களை பரிமாறிகொண்டு வருகின் றனர். தற்போதைய நிலையில் சிலர் தொழில்நுட்பத்தைப் பயன்ப டுத்தாமல் வேலைகள் செய்வதாலும் ஒவ்வொரு பிரிவினரும் தனித் தனியே வெவ்வேறு தொழில்நுட்ப தளங்களைப் பயன்படுத்துவதாலும் தொடர்பு சீரான நிலையில் இருப்பதில்லை. "இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் ஒரே ஒருங் கிணைந்த தளம் மூலம் பல நிலைகளில் உள்ளவர்களுடனான தொடர்பை இணைத்து சீரான தளவாடப் போக்குவரத்தை அமைக்க முனைகிறது 'ட்ரிப்' தளம்," என்று திரு கோ கூறியுள்ளார்.