சென்னை: கடந்த பத்து தினங்களாக பல்வேறு மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக மாநிலம் முழுவதும் 1,379 ஏரிகளும் குளங்களும் நிரம்பியுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் மொத்தம் 14,098 ஏரிகள், குளங்கள் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளன. இவற்றில் தற்போது 1379 ஏரி, குளங்கள் நிரம்பி விட்டன. சென்னை மாவட்டத்தில் உள்ள வேளச்சேரி, கொளத்தூர் ஆகிய 2 ஏரிகளும் நிரம்பி விட்டன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 961 ஏரிகளில் 239ம் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 593 ஏரிகளில் 217ம் நிரம்பியுள்ளன. கன்னியாகுமரி மாவட்டத்தில் 252 ஏரிகள் நிரம்பியுள்ளன. ஈரோடு, கரூர், மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூர், சிவகங்கை, விருதுநகர் ஆகிய 9 மாவட்டங்களில் ஒரு ஏரி கூட நிரம்பவில்லை என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பத்து நாள் மழை: 1,379 ஏரிகள், குளங்கள் நிரம்பியதாகத் தகவல்
10 Nov 2017 01:32 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 11 Nov 2017 06:59
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Mohamed Javed Indian Muslim Food: 473 Fernvale St, Singapore 790473
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
சிங்கப்பூர் ஆகாயப்படை அருங்காட்சியகத்தில் குதூகலத் தமிழ் கற்றல்.
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!