காற்று மாசு கட்டுப்பாட்டுத் திட்டத்தைச் சமர்ப்பிக்கத் தவறினால் சம்பளப் பிடிப்பு

புதுடெல்லி: இந்தியாவின் மாநில அரசுகள் தங்களது மாசு கட்டுப் பாட்டுத் திட்டத்தை இன்னும் இரு வாரங்களில் சமர்ப்பிக்கவில்லை என்றால், சம்பந்தப்பட்ட அதிகாரி களின் சம்பளம் பிடிக்கப்படும் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அறிவித்துள்ளது. டெல்லியில் காற்று மாசு ஆபத்தான நிலையை எட்டியுள்ள தால், தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இந்தக் கடுமையான நடவடிக் கையை எடுத்துள்ளது. காற்றுத் தூய்மைக்கேடு மிக மோசமான நிலையை எட்டியதால் டெல்லியில் பள்ளிகளுக்கு சில நாட்கள் விடுமுறை அளிக்கப் பட்டது.

இந்நிலையில், காற்று மாசு தொடர்பாக தேசிய பசுமைத் தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவில், "அனைத்து மாநில அரசுகளின் மாசு கட்டுப்பாடு தொடர்பான மூத்த அதிகாரி இரு வாரங்களில் காற்று மாசைக் கட்டுப்படுத்துவது தொடர்பான திட்ட அறிக்கையைச் சமர்ப்பிக்கவேண்டும். "நகரங்களில் காற்று மாசு ஆபத்தான நிலையை எட்டும் போதெல்லாம் இந்தத் திட்டப்படி துரித நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். "திட்ட அறிக்கையைச் சமர்ப் பிக்கத் தவறும் அதிகாரிகளின் சம்பளத்தில் ஐந்து லட்ச ரூபாய் பிடித்தம் செய்யப்பட வேண்டும்," என்று கூறியது. மேலும் காற்று மாசு ஆபத்தான நிலையை எட்டும்போது பள்ளி கள் தன்னிச்சையாக மூடப்படலாம் என்றும் ஆணையம் கூறியது.

இதுதவிர டெல்லி சாலை களில் கடைகள் முன் வாகனங்கள் நிறுத்தினால் 5,000 ரூபாய் அபரா தம் விதிக்கப்படும் என்றும் அறி விக்கப்பட்டுள்ளது. இங்கு கனரக வாகனங்கள் நுழைவதற்கு விதிக் கப்பட்ட தடை நீக்கப்பட்டாலும் காற்று மாசுபாட்டிற்கு காரணமான தொழிற்சாலைகள் மீதான தடை உத்தரவு நீடிக்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!