சிங்கப்பூரில் 25 வாரங்கள் அல்லது அதற்கு மேல் வேலை யின்றி இருக்கும் அதிகம் பேர் வேலை தேடி வருவதாக மனித வள அமைச்சின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. சி ங் க ப் பூ ர ர் க ளு க் கா ன வேலையின்மை விகிதம் சிறிய அளவில் குறைந்திருக்கும் நிலையிலும் இந்த நிலவரம் உருவாகி இருப்பதாக இவ் வாண்டின் மூன்றாம் காலாண் டுக்கான அமைச்சின் அறிக்கை குறிப்பிட்டுள்ளது. நீண்டகால வேலையின்மை விகிதம் கடந்த செப்டம்பரில் 0.8 விழுக்காடாக அதிகரித் தது. ஜூன் மாதத்தில் அது 0.7 விழுக்காடாக இருந்தது என்கிறது அறிக்கை.
ஒட்டுமொத்தமாக, செப்டம் பர் மாதத்தில் வேலையின்மை விகிதம் 2.2 விழுக்காடாகத் தொடர்ந்தது. அதில் வேலை யின்றி இருந்த சிங்கப்பூரர் களின் விகிதம் 3.2 விழுக் காடு. அது மார்ச் மாதத்தில் 3.5 விழுக்காடாகவும் அதற்கு அடுத்த காலாண்டு முடிவுப் பகுதியான ஜூன் மாதம் 3.3 விழுக்காடாகவும் இருந்தது. மூன்றாம் காலாண்டில் சிங் கப்பூர் குடிமக்கள், நிரந்தரவாசி கள் ஆகியோரைச் சேர்த்துப் பார்கைகையில் வேலையின்மை விகிதம் அதற்கு முந்திய காலாண்டைப் போலவே மாற்ற மின்றி 3-1 விழுக்காடாக இருந் தது. ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான மூன்றாவது காலாண்டு காலத்தில் ஆட் குறைப்புக்கு ஆளானோரின் எண்ணிக்கை 3.400.