‘புடேன்’ எரிவாயு வெடித்து 9 கார்கள் எரிந்த சம்பவம்: ‘கிராப்’ ஓட்டுநர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்

கிராப் கார் ஓட்டுநரான டுவைட் டி சொரியானோ, 'புடேன்' எரிவாயு வைத் தனது காருக்குள் நிறைத்து, அதை சுவாசித்து தற்கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டபோது வாயு தீப்பற்றி பெரும் வெடிப்பு ஏற்பட்டது. அதனால் சொரியானோ வின் கார் உட்பட ஒன்பது கார்கள் சேதமடைந்தன. கவனக்குறைவாக செயல்பட்ட இரு குற்றச்சாட்டுகள், ஒரு குறும் புச்செயல் குற்றச்சாட்டு, மேலும் சம்பவத்திற்குத் தொடர்பில்லாத நான்கு ஏமாற்றுக் குற்றச்சாட்டு கள் தொடர்பிலான குற்றங்களை நீதிமன்றத்தில் நேற்று 32 வயது சொரியானோ ஒப்புக்கொண்டார்.

உறவுப் பிரச்சினை, நிதிப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டி ருந்த சொரியானோ, தமது வாழ்க் கையை முடித்துகொள்ள நினைத் தார் என்று நீதிமன்றத்தில் கூறப் பட்டது. அதற்காக ஏப்ரல் 26ஆம் தேதி தீப்பற்றக்கூடிய புடேன் எரிவாயு டின்களை வாங்கி, தனது 'நிசான் டுவாலிஸ்' காரில் அமர்ந்தபடி டின்களைத் திறந்து காரில் வாயுவை நிரப்பினார். மாலை 6 மணி அளவில் அவருக்கு மயக் கம் ஏற்படவே, புக்கிட் பாத்தோக் ஸ்திரீட் 24, புளோக் 290Hல் உள்ள கார் நிறுத்துமிடத்திற்கு காரை ஓட்டிச் சென்றார். புகை பிடிக்க அவர் லைட்டரைத் திறந்த போது, எரிவாயு தீப்பற்றி வெடிப்பு ஏற்பட்டு, கார்கள் சேதமடைந்தன.

கடும் சேதமுற்ற சொரியானாவின் கார். படம்: ஃபேஸ்புக்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!