தனது காருக்குள் ஒரு கரப் பான்பூச்சி நகர்ந்து செல்வதைப் பார்த்த 61 வயது மாது ஒருவர் மிரண்டுபோய் காரின் கட்டுப் பாட்டை இழந்து அதை ஒரு பாலத் தில் மோதியுள்ளார். ஜூரோங் ஈஸ்ட் சென்ட்ரலில் கடந்த வெள்ளிக்கிழமை நிகழ்ந்த இச்சம்பவத்தில் அந்த மஸ்டா சிவப்பு நிற கார் அங்குள்ள மேம் பாலத்தின் படிக்கட்டுகளில் மோதி, கடும் சேதத்துக்குள்ளாகியது. இச்சம்பவம் பற்றி அன்று காலை 7.30 மணிக்குத் தனக்கு தகவல் கிடைத்ததாக போலிஸ் தெரிவித்தது.
சிறு காயங்களுக்கு உள்ளான அந்த மாது இங் டெங் ஃபோங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். சம்பவத்தின்போது, அந்த மாது காரில் தனியாக இருந்தார் என்று அறியப்படுகிறது. காரை செலுத் திக்கொண்டிருந்தபோது, கரப்பான் பூச்சியைக் கண்டதும் அதிர்ச்சி யில் காரை அருகிலுள்ள மேம்பா லத்தில் மோதியுள்ளார். போலிஸ் விசாரணை தொடர் கிறது.
ஜூரோங் ஈஸ்ட் சென்ட்ரலில் உள்ள மேம்பாலத்தின் படிக்கட்டுகளில் மோதிய இந்த 'மஸ்டா' சிவப்பு நிற காரில் பலத்த சேதம் ஏற்பட்டது. படம்: ஃபேஸ்புக்