வர்த்தகர் ஒருவரின் சிங்கப்பூர் குடியுரிமை பறிக்கப்பட்டுள்ளது. குடிநுழைவுச் சட்டங்களை மீறிய தற்காக அவருக்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சீனாவில் பிறந்த அந்த வர்த்தகருக்கு 2002ஆம் ஆண்டில் சிங்கப்பூர் குடியுரிமை வழங்கப் பட்டது. 2007ஆம் ஆண்டில் சீனாவின் பணக்காரர்கள் பட்டியலில் அவர் 70வது இடத்தைப் பிடித்தார். 2010ஆம் ஆண்டில் வரி ஏய்ப்புக் குற்றத்தின் பேரில் அவர் சீனாவில் சிறையில் அடைக்கப் பட்டார். 2014ஆம் ஆண்டில் லான் ஷீலி என்று இருந்த தமது பெயரை அவர் மைக் டேவிஸ் (படம்) என்று மாற்றிக்கொண்டார். 2016ஆம் ஆண்டில் மோசடிக் குற்றம் தொடர்பாக அவரிடம் சீன அதிகாரிகள் விசாரணை நடத் தினர்.
அப்போது அவரது சிங்கப்பூர் கடப்பிதழை சீன அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஆனால் சீனாவிலிருந்து தப்பிய டேவிஸ் வியட்னாமுக்குள் சட்டவிரோத மாக நுழைந்தார். ஹனோயில் தமது கடப்பிதழ் காணாமல் போய்விட்டதாக 58 வயது டேவிஸ் அங்கிருந்த சிங்கப்பூர் தூதரகத்திடம் பொய் கூறினார். வியட்னாமுக்குள் எவ்வாறு நுழைந்தார் என்பது குறித்து வியட்னாமிய அதிகாரிகளிடம் விளக்கம் அளிக்க வேண்டும் என்று சிங்கப்பூர் தூதரகம் அவரிடம் தெரிவித்தது. அதனைத் தொடர்ந்து, வியட் னாமிய பெண் ஒருவரிடம் $11,336 கொடுத்து தம்மைப் போன்ற தோற்றமுள்ள 36 வயது ஃபூ சிங்கின் பெயரில் ஹாங்காங் கடப்பிதழ் ஒன்றை டேவிஸ் பெற்றுக்கொண்டார். சிங்கப்பூருக்கு வர அந்தப் பெண் மூலம் விமானப் பயணச் சீட்டு ஒன்றையும் அவர் பெற்றுக் கொண்டார். 2016ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் டேவிஸ் சிங்கப்பூர் வந்தடைந்தார். இரண்டு வாரங்கள் கழித்து டேவிஸ் சட்டவிரோதமாக சிங்கப்பூருக்கு வந்ததை அதி காரிகள் கண்டுபிடித்தனர்.