சென்னை: மதுரை அருகே உள்ள தோப்பூர் பகுதியில் ரூ.1,500 கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட உள்ளதாக முதல் வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மத்திய அர சுக்குத் தேவைப்படும் அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்யும் என்று செய்தியாளர் களிடம் பேசுகையில் அவர் குறிப்பிட்டார்.
மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்காக 700 ஏக்கர் நிலம் ஒதுக்கப் பட்டுள்ளதாகவும், 750 படுக்கை வசதிகளுடன் அம்மருத்துவமனை அமையும் என்றும் முதல்வர் தெரிவித்தார். "100 எம்பிபிஎஸ் இடங்களுடன் 60 செவிலியர்கள் பயிற்சி பெறும் விதமாக எய்ம்ஸ் மருத்துவமனை யில் வசதிகள் செய்யப்படும். "ஜெயலலிதா முதல்வராக இருந்த போது தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தி ருந்தார்.
இந்நிலையில் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க இருப்பதற்காக பிரதம ருக்கு நன்றி தெரிவிக்கிறோம்," என்றார் முதல்வர் பழனிசாமி. தமிழகம், ஜம்மு காஷ்மீர், பஞ் சாப், அசாம், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என கடந்த 2015ஆம் ஆண்டு மத்திய அரசு அறிவித்திருந்தது.