ப. பாலசுப்பிரமணியம்
மேற்கத்திய மருத்துவத்திற்கு ஈடாக, மருத்துவமனை சேவை யில் இந்திய பாரம்பரிய மருத்துவம் இடம்பெற்று, இந்திய பாரம் பரிய மருத்துவர்கள் மருத்துவ மனை கட்டமைப்பில் உள்ளடக்கப் படும் சாத்தியம் எதிர்காலத்தில் வரும் என்று செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் விக்ரம் நாயர் நம்பிக்கை தெரிவித்தார். கிராண்ட் கார்ப்தோன் வாட்டர் ஃபிரண்ட் ஹோட்டலில் நேற்று நடந்த 4வது பாரம்பரிய இந்திய மருத்துவ அனைத்துலக மாநாட் டில் அவர் இவ்வாறு கூறினார்.
இந்த மாநாட்டை இந்தியத் தூதரகம், சிங்கப்பூர் சித்த மருத்துவர்கள் சங்கம், சிங்கப்பூர் ஆயுர்வேத மருத்துவர்கள் சங்கம் ஆகியவை கூட்டாக நடத்தின. மாநாட்டில் உரையாற்றிய சிங் கப்பூருக்கான இந்தியத் தூதர் ஜாவேத் அஷ்ரஃப், தற்போது சிங்கப்பூரில் திறன்மிக்க யோகா பயிற்றுவிப்பாளர்கள், இந்திய பாரம்பரிய மருத்துவர்கள் இருக்- கிறார்கள் என்றும் அவர்கள் வழங் கும் சேவைகளில் சமூகத்தின் எல்லா பிரிவினருக்கும் நாட்டம் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.