டிபிஎஸ், ஓசிபிசி வங்கிகளின் வாடிக்கையாளர்கள் இணைய மோசடி குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு போலிஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது. வாடிக்கையாளர்களில் சிலர், தங்கள் தனிப்பட்ட விவரங்கள், கடன் அட்டை தகவல்கள் போன்றவற்றைப் போலி இணையத்தளங்கள் மூலமாகவோ தொலைபேசி வழியாகவோ பகிர்ந்திருந்தனர். போலியான இணைய விளம்பரங்கள், குறுஞ்செய்திகள் ஆகியவற்றுக்குப் பதிலளித்த வாடிக்கையாளர்கள் இந்த மோசடியினால் பாதிக்கப்பட்டுள்ளனர். உரிய அனுமதியின்றி அவர்களுடைய கடன் அட்டைகள் மூலம் பல்வேறு நாடுகளின் நாணயப் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரியவந்தது. வங்கிக் கணக்குகள் தொடர்பான முக்கிய தகவல்களைக் கோரி வரும் மின்னஞ்சல்களை மிகுந்த கவனத்துடன் கையாளுமாறு சிங்கப்பூர் நாணய ஆணையம் கடந்த மே மாதம் வாடிக்கையாளர்களை எச்சரித்திருந்தது.
டிபிஎஸ், ஓசிபிசி வங்கிகளின் வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை
31 Aug 2018 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 1 Sep 2018 07:22
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Mohamed Javed Indian Muslim Food: 473 Fernvale St, Singapore 790473
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!