டிபிஎஸ், ஓசிபிசி வங்கிகளின் வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை

டிபிஎஸ், ஓசிபிசி வங்கிகளின் வாடிக்கையாளர்கள் இணைய மோசடி குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு போலிஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது. வாடிக்கையாளர்களில் சிலர், தங்கள் தனிப்பட்ட விவரங்கள், கடன் அட்டை தகவல்கள் போன்றவற்றைப் போலி இணையத்தளங்கள் மூலமாகவோ தொலைபேசி வழியாகவோ பகிர்ந்திருந்தனர். போலியான இணைய விளம்பரங்கள், குறுஞ்செய்திகள் ஆகியவற்றுக்குப் பதிலளித்த வாடிக்கையாளர்கள் இந்த மோசடியினால் பாதிக்கப்பட்டுள்ளனர். உரிய அனுமதியின்றி அவர்களுடைய கடன் அட்டைகள் மூலம் பல்வேறு நாடுகளின் நாணயப் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரியவந்தது. வங்கிக் கணக்குகள் தொடர்பான முக்கிய தகவல்களைக் கோரி வரும் மின்னஞ்சல்களை மிகுந்த கவனத்துடன் கையாளுமாறு சிங்கப்பூர் நாணய ஆணையம் கடந்த மே மாதம் வாடிக்கையாளர்களை எச்சரித்திருந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!