மாலத்தீவு புதிய அதிபருக்கு அமெரிக்கா நேசக்கரம்

வா‌ஷிங்டன்: மாலத்தீவு அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும் இப்ராஹிம் முகம்மது சோலிக்கு வாழ்த்துத் தெரிவித்து உள்ள அமெரிக்கா அவருடன் அணுக்கமாக இணைந்து பணியாற்றப் போவதாகவும் கூறியுள்ளது. சீனாவின் ஆதரவு பெற்ற வலு வான அரசியல் தலைவர் இத்தேர்தலில் தோற்றுப்போனதைத் தொடர்ந்து அமெரிக்கா நேசக்கரம் நீட்டியுள்ளது.

"சுதந்திரமான, வளப்பமிக்க மாலத்தீவின் மீதும் கட்டுப் பாடற்ற இந்தியப் பெருங்கடல் வட்டாரத்தின் மீதும் அமெரிக்கா நாட்டம் கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக ஜனநாயகத்தை நிலைநிறுத்தும் நோக்கத்துடன் மாலத்தீவின் புதிய அரசாங்கத் துடன் ஒத்துழைப்பை விரிவாக்கி அணுக்கமாகப் பணியாற்ற அமெரிக்கா தயாராக உள்ளது என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஜனநாயகம் மீது கடப்பாடு கொண்டுள்ளமைக்காக மாலத் தீவு மக்களையும் அமெரிக்கா வாழ்த்தி உள்ளது. இந்நிலையில், புதிதாக நெருக்கடி ஏதுவும் உருவாகுமோ என்று நிலவிய அச்சத்தைப் போக்கும் வகையில் இப்போதைய அதிபர் அப்துல்லா யாமீன் தமது தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளார். அத்துடன் தம்மை வீழ்த்திய சோலிக்கு அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!